மிகச் சிறப்பாகவே நடந்தது, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை, விழுப்புரத்தில் இன்று (16.12.2018) நடத்திய, மாரத்தான்.
அதிகாலை 6 மணிக்கெல்லாம் பெருந்திட்ட வளாக மைதானம் நிரம்பி வழிந்தது.
சிறுவர் முதல் பெரியவர் வரை, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி இயக்குனர் திரு. அவர்கள் மிகவும் நேர்த்தியாக மாரத்தான் வீரர்களை ஒருங்கிணைத்தார்.
அடடா… வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் மாரத்தான் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
உடன், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் நம் தோழர்களும்.
ஓட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
அருங்காட்சியகம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். நன்றிங்க ஐயா…
விழுப்புரத்தின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகியுள்ளது இன்றைய மாரத்தான்.
மகிழ்ச்சி தான்.
இதற்காக கடுமையான உழைப்பினைச் செலுத்திய, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை தலைவர் அ.அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்களை நாம் வாழ்த்துவோம்…
புகைப்படம்: கிருஷ்ணா
அதிகாலை 6 மணிக்கெல்லாம் பெருந்திட்ட வளாக மைதானம் நிரம்பி வழிந்தது.
சிறுவர் முதல் பெரியவர் வரை, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி இயக்குனர் திரு. அவர்கள் மிகவும் நேர்த்தியாக மாரத்தான் வீரர்களை ஒருங்கிணைத்தார்.
அடடா… வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் மாரத்தான் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
உடன், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் நம் தோழர்களும்.
ஓட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
அருங்காட்சியகம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். நன்றிங்க ஐயா…
விழுப்புரத்தின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகியுள்ளது இன்றைய மாரத்தான்.
மகிழ்ச்சி தான்.
இதற்காக கடுமையான உழைப்பினைச் செலுத்திய, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை தலைவர் அ.அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்களை நாம் வாழ்த்துவோம்…
புகைப்படம்: கிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக