சனி, 8 டிசம்பர், 2018

செ.கொத்தமங்கலம்: மக்களை நோக்கி வரலாறு...

“இதையெல்லாம் பல வருசத்துக்கு முன்பே கண்டுபிடித்து விட்டோம். ஆவணப்படுத்தி விட்டோம்” என்பார்கள்.

உண்மை தான்.  மறுக்க இயலாது. வரலாறு ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கும்!
ஆனால், ஊர் மக்களுக்கு?

அவங்க ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து அவர்களுக்கே தெரியாது!

விழுப்புரத்தை அடுத்த செ.கொத்தமங்கலம் கள ஆய்வின்போது இந்த நிலவரத்தை மாற்ற நாம் முனைந்தோம்.

கூடுமானவரை அப்பகுதி இளைஞர்களை நம்முடன் அழைத்துச் சென்றோம்.

இது மூத்த தேவி, இது சதிக்கல் என்றெல்லாம் அவர்களுக்கு விளக்கினோம். இவை, அந்தக் கிராமத்தின் பெயரில் blog ஏற்படுத்தி இருந்த, விஜயராமன் போன்றவர்களுக்கு புதிய தகவலாகவே இருந்தது. அறிந்து மகிழ்ந்தார்கள்.

அடுத்தக் கட்டமாக, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். தலைமை ஆசிரியர் திரு.எம்.தண்டபாணி அவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாகவே இருந்தனர்.


சில நிமிட இடைவெளியில், மாணவ மாணவியரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய நாம், செ.கொத்தமங்கலம் கிராமத்தின் தொன்மை குறித்தும் அப்பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும் விரிவாகவே பேசினோம்.



வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்து மாணவ மாணவியர் அக மகிழ்ந்தார்கள்.

நாம் பேசி முடித்தவுடன் வெளியே ஓடிவந்த மாணவர்கள் சிலர், அங்கிருந்த வரலாற்றுச் சின்னங்களை ஆர்வத்துடன் சுற்றி வந்துப் பார்த்தனர்.

நமக்கும் மகிழ்ச்சி!


இப்போது பத்திரிகைகளிலும் கூட செ.கொத்தமங்கலத்தின் தொன்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஊடகங்களிலும் செய்திகள்...



வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது என்பார்களே, அது இதுதான்.

எத்தனைத் தடைக்கற்கள் வந்தாலும், மக்களிடம் வரலாற்றைக் கொண்டு செல்லும் நம் பணி, மக்கள் ஒத்துழைப்புடன் தொடரும்…

ஏனெனில் வரலாறு,  மக்களுக்குச் சொந்தமானது.

புகைப்படங்கள்: கிருஷ்ணா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக