ஞாயிறு, 1 டிசம்பர், 2019

ஆலாத்தூர் கிராமம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று 01.12.2019 ஞாயிறு நீண்டப் பயணம்..!


ஆலாத்தூர் தொடங்கி, திருவாமாத்தூர், எடப்பாளையம் எனத் தொடர்ந்தது!


சேற்றிலும் சகதியிலும் உளுந்து வயல்களிலும் சவுக்கைத் தோப்புகளிலும் நம் பயணம்...

ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!


இதோ இந்த சிலையைப் பாருங்கள்: இதோ இந்தக் கல்லைப் பாருங்கள்; இது என்னவாக இருக்கும்..?


இவர்களின் வரலாற்று ஆர்வம் ரெக்கை கட்டிப் பறந்தது!

எப்படியும் நான்கு மணி நேரத்துக்கு மேல் கிராமங்களின் ஒவ்வொரு மூலைக்கும் நகர்ந்து சென்றோம்.

ஆலாத்தூர் பெரியவர் திரு.ஜெயராமன் அவர்களும் அந்தக் கிராமத்தின் ஆர்வமிக்க இளைஞர்களும் தான் எங்களின் உந்து சக்தி!


தங்கள் பகுதியின் வரலாறுத் தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இன்று நம்மை வழி நடத்தினர்.

இந்த ஆர்வம் ஒவ்வொரு பகுதியிலும் இருக்க வேண்டும்... இருந்தால்... நிச்சயம் அந்தந்தப் பகுதியின் வரலாறுகள் உயிர்த்தெழும்!


ஆலாத்தூர் நண்பர்களுக்கு நம் நன்றிகள்!

வழக்கம் போல சளைக்காமல் இன்றும் உடன் பயணித்த விஷ்ணுவுக்கும் நன்றி!


குறிப்பாக, ஆலாத்தூர் தடயங்களை நமக்கு அடையாளப்படுத்திய நண்பர் நித்தியானந்தம் அவர்களுக்குச் சிறப்பு நன்றி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக