சனி, 7 டிசம்பர், 2019

விழுப்புரத்தில் கல்மரப் பூங்கா

மகிழ்ச்சி...
வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம்...

திருவக்கரை கல்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நம் கோரிக்கையைத் தொடர்ந்து,

" விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் கல் மரப் பூங்கா அமைக்கப்படும்" என நேற்று (07.12.19) அறிவித்து இருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.

கல் மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இந்த அறிவிப்பினை நாம் பார்க்கிறோம்!

மாவட்ட ஆட்சியர் அவர்களின் இந்த அறிவிப்பை வரவேற்போம். அவருக்கு நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.

இந்த விசயத்தை முக்கியப் பிரச்சினையாகக் கருதி, முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது என்பதுடன் மட்டுமல்லாமல்

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற

மதிப்பிற்குரிய நம் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!

இணைப்பில்: இன்றைய (08.12.19 ஞாயிறு) தினமணி மற்றும் தமிழ் இந்து நாளிதழ் செய்திகள்...

                      தமிழ் இந்து 08.12.19

                      தினமணி 08.12.19

நன்றி:
திரு. நீலா நீலவண்ணன்.
திரு. இல.அன்பரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக