ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பம்பை ஆறு

“வெண்ணெய் உருகுமுன் பெண்ணெய் பெருகும்” என்பதெல்லாம் பழைய மொழியாகிவிட்டது என்பது மட்டுமல்ல, தென் பெண்ணைக்கு இனிப் பொருந்துமா எனத் தெரியவில்லை?


ஆனால், இந்த முதுமொழி, பம்பை ஆற்றுக்கு முற்றிலும் பொருந்தும் போலிருக்கிறது!

பாருங்கள்: இன்று 01.12.2019  ஞாயிறு காலை11 மணியளவில் திருவாமாத்தூர் அடுத்த எடப்பாளையம் பகுதியில் பம்பை ஆற்றைக் கடந்தோம். அப்போது ஆற்றில் தண்ணீர் இல்லை.

அப்போதே எதிர்ப்பட்ட பெண்மணி ஒருவர் சொன்னார்: “ஆற்றில் தண்ணீர் வரப் போகிறது. சீக்கிரம் திரும்பி விடுங்கள்”.

தண்ணீரே இல்லாத ஆற்றில் எப்படி அதற்குள் தண்ணீர் வரும்? எமக்குள் ஒரு அலட்சியம் தான்.

சுமார் இரண்டு மணி நேரம், நமது களப் பயணம் சேற்று வயலில், ஆலாத்தூரின் அன்பு நண்பர்களுடன் தொடர்ந்தது.

திரும்பி வந்து நமக்குத் தூக்கிவாரிப் போட்டது! பம்பை ஆற்றில் முழங்காலுக்கும் மேலே தண்ணீர் கரைபுண்டது!




இன்னும் வருமாம்.
சீக்கிரம் என நண்பர்கள் விரைவுப்படுத்தினர்.


கரை சேர்ந்தோம்..!

வெண்ணெய் உருகுமுன் பம்பை பெருகும்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக