தென்பேர் கிராமப் பெரியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்;
தங்கள் மண்ணில் கிடைத்த மகத்தான வரலாற்றுச் சின்னங்களை உரிய முறையில் பாதுகாத்து வருகின்றனர்.
பல்லவர் கால ஐயனார் முதல் நாயக்கர் கால ஆஞ்சநேயர் வரையிலான வரலாற்றுத் தடயங்கள் இம்மண்ணில் பதிந்துள்ளன.
இன்று 22.12.19 ஞாயிறு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நம்முடன் கிராமத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சுற்றி சுற்றி வந்தார்கள்.
திறந்தவெளியில் நிற்கும் சிற்பங்கள் முதல் கோயில் கொண்டிருக்கும் சிற்பங்கள் வரை சலிக்காமல் நமக்குக் காட்டினர்.
தங்கள் மண்ணின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல், உந்துதல் இவர்களுக்கு!
சிறியவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மகிழ்ச்சி. இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!
இம்மண்ணின் மைந்தர் ஆசிரியர் திரு. அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்மை தென்பேர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல்…
கிராம முக்கியஸ்தர்களை ஒருங்கிணைத்து… அனைவரையும் ஒருங்கே பயணிக்க வைத்த இவர்தம் பாங்கு பாராட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.
தென்பேர் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. எழுதுவோம்.
புகைப்படங்கள்: திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்.
தங்கள் மண்ணில் கிடைத்த மகத்தான வரலாற்றுச் சின்னங்களை உரிய முறையில் பாதுகாத்து வருகின்றனர்.
பல்லவர் கால ஐயனார் முதல் நாயக்கர் கால ஆஞ்சநேயர் வரையிலான வரலாற்றுத் தடயங்கள் இம்மண்ணில் பதிந்துள்ளன.
இன்று 22.12.19 ஞாயிறு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நம்முடன் கிராமத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சுற்றி சுற்றி வந்தார்கள்.
திறந்தவெளியில் நிற்கும் சிற்பங்கள் முதல் கோயில் கொண்டிருக்கும் சிற்பங்கள் வரை சலிக்காமல் நமக்குக் காட்டினர்.
தங்கள் மண்ணின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல், உந்துதல் இவர்களுக்கு!
சிறியவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மகிழ்ச்சி. இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!
இம்மண்ணின் மைந்தர் ஆசிரியர் திரு. அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்மை தென்பேர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல்…
கிராம முக்கியஸ்தர்களை ஒருங்கிணைத்து… அனைவரையும் ஒருங்கே பயணிக்க வைத்த இவர்தம் பாங்கு பாராட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.
தென்பேர் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. எழுதுவோம்.
புகைப்படங்கள்: திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக