வெள்ளி, 6 டிசம்பர், 2019

திருவக்கரை கல்மரங்கள்: செம்மண் குவாரிகளால் சுரண்டப்படும் அவலம்!

கொடுமையாகத்தான் இருக்கிறது..!

அண்மையில், விழுப்புரத்தை அடுத்துள்ள ஆலாத்தூர் கிராமத்திற்குச் சென்றிருந்தோம்.

சின்னஞ்சிறு பாதை. செம்மண் அடித்திருந்தனர்.

சற்று உற்றுப் பார்த்தால், சாலையின் நடுவிலும் பக்கவாட்டிலும் ஏராளமானக் கல் மரத் துண்டுகள்!

திருவக்கரை பகுதியில் இருந்து வந்திருக்கின்றன.

அண்மையில், விக்கிரவாண்டி ரயில் பாதை ஓரங்களிலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் கல் மரங்கள் காணப்படுவது பற்றி நான் வெளியிட்டு இருந்த காணொளி நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்!

மாபெரும் வரலாற்று ஆவணங்களான கல் மரங்கள் இப்படி சுரண்டப்பட்டு வருகின்றன.

இதையெல்லாம் யார் தடுப்பது?

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நேற்று 05.12.2019 வியாழனன்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருக்கிறேன்.

பார்க்கலாம்..!

மாவட்ட ஆட்சியருக்கு மனு தொடர்பான பத்திரிகை செய்திகள்..

                      தமிழ் இந்து 06.12.19

                        தினமணி 06.12.19

                   மாலை முரசு 06.12.19

        The New Indian express 07.12.19

                        தினமலர் 07.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக