திங்கள், 30 டிசம்பர், 2019

டி.புதுப்பாளையம் கிராமத்தின் கதைச் சொல்லி!

டி.புதுப்பாளையம் கிராமம்.

அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் பின்னர் திமுகவில் இணைந்து விழுப்புரம் நகர மன்றத் தலைவராகவும் இருந்த, காலஞ்சென்ற எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் அவர்களின் சொந்த ஊர்.

நேற்று, அந்த ஊருக்குப் பயணம். அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சேட்டு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் பழக்கம்.

நல்ல கதைச் சொல்லியாக இருக்கிறார்.


இங்குக் கோயில் கொண்டிருக்கும் முனீஸ்வரர், அருகில் உள்ள நல்ல தண்ணீர் குளம் என்றழைக்கப்படும் "தாசி" குளம், குளக்கரையில் காணப்படும் கல்வெட்டுகள் பற்றியெல்லாம் நிறைய கதைகளைப் பறிமாறிக் கொள்கிறார்.


இந்தக் கதைகளில் வரலாறும் புதைந்து கிடக்கிறது.


குறிப்பாக, "தென்பேர் கிராமத்திற்கு அருகே வடபேர் எனும் கிராமம் இருந்து அழிந்தது. பின்னர் உருவான புதிய கிராமம் தான் இந்தப் புதுப்பாளையம் கிராமம்" என்கிறார் சேட்டு.



பதிவு செய்யப்பட வேண்டிய தகவல்!

புகைப்படங்கள்: கண சரவணகுமார் திருவாமாத்தூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக