வெள்ளி, 1 மே, 2020

தமிழன்

முரசொலி குழுமத்தில் இருந்து “தமிழன்” என்றொரு நாளிதழ் வெளிவந்தது,  யாருக்கேனும் நினைவு இருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்தன.

விழுப்புரத்தில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன் போட்டு இருந்தனர். அதில் நானும் ஒருவன்!

இதில், எனக்கும் திமுகவில் இருக்கும் நண்பர் ஒருவருக்கும் தான் ‘இன்டர்வியூ’ அழைப்பு வந்தது.


14.3.1992 பிற்பகல் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அண்ணனுடன் ஆஜரானேன்.

 ஏறக்குறைய நமக்கு நினைவு தெரிந்து சென்னை முதல் பயணமும் அதுவாகத்தான் இருக்கும்!

நேர்காணல் நடத்தியது, எழுத்தாளர் சாவி என நினைவு!

“ஜெர்னலிசம், இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ன வேறுபாடு?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. முடிந்த வரை விடையளித்தேன்.

ஆனாலும் கூட, அந்தத் திமுக நண்பருக்குத்தான் ‘நிருபர்’ வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்த ஒரு வேலையானாலும் திறமை மட்டும் இருந்தால் போதாது. சிபாரிசும் அவசியம் என்பதை “தமிழன்” உணர்த்தியது.

அப்புறம், இந்தப் பத்திரிகை எட்டு மாதங்கள் மட்டுமே வந்ததாகவும் நினைவு!

(இணைப்பு: நேர்காணலுக்காக அனுப்பப்பட்டிருந்த தந்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக