அன்றைய தினம் திண்டிவனம் நகரம் கலவர பூமியாகக் காட்சியளித்தது.
இங்கு நடந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடர, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கி இருந்தார்.
இதனால் சுப்பிரமணியசாமி மற்றும் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.
சு.சாமிக்கு சென்ற இடமெல்லாம் “சிறப்பு”.
இந்நிலையில், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பொறுப்பு வகித்த ஆளுநர் சென்னா ரெட்டி, 10.4.1995 அன்று மாலை சென்னையில் இருந்து புதுவை பயணமானார்.
அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் திண்டிவனத்தில் திரண்டு இருந்தனர்.
அங்கிருக்கும் வீராணம் இல்லத்தில் ஆளுநர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாகத் திட்டம்.
மாலை 4.30 மணிக்கு ஆளுநரின் கார் திண்டிவனத்திற்குள் நுழைந்தது. வீராணம் இல்லம் நோக்கி வந்த காரை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
கற்கள், அழுகிய முட்டை, தேங்காய் மட்டை போன்றவை சரமாரியாக வீசப்பட்டன.
இன்னொரு பக்கம், அதிமுகவினரை அப்புறப்படுத்த விழுப்புரம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலிசார் கடும் பிரயத்தனம் செய்தனர்.
இந்த சம்பவங்கள் சுமார் அரைமணி நேரம் நீடித்தன.
இவ்வளவுக்கும், ஆளுநர் சென்னா ரெட்டி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.
பின்னர் அவர் புதுவை புறப்பட்டார். புதுவை சாலையில் கூட இந்த எதிர்ப்பு தொடர்ந்தது. இன்னும் சிறிது தூரத்தில் நின்றிருந்த திமுகவினர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து, பின்னாளில் திமுகவில் இணைந்த, எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்த பேட்டியில், “ஒரு வேகத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோமே தவிர சிந்திக்கும் நிலையில் செயல்படவில்லை” என விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கில் இவர் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
(இணைப்பில் உள்ள தினகரன் செய்தியில், 4 எம்.எல்.ஏ. தலைமையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. அப்போது சட்டசபை நடந்த நேரம். குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தான் இருந்தனர். இந்த செய்தி குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக நினைவு)
இங்கு நடந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடர, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கி இருந்தார்.
இதனால் சுப்பிரமணியசாமி மற்றும் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.
சு.சாமிக்கு சென்ற இடமெல்லாம் “சிறப்பு”.
இந்நிலையில், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பொறுப்பு வகித்த ஆளுநர் சென்னா ரெட்டி, 10.4.1995 அன்று மாலை சென்னையில் இருந்து புதுவை பயணமானார்.
அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் திண்டிவனத்தில் திரண்டு இருந்தனர்.
அங்கிருக்கும் வீராணம் இல்லத்தில் ஆளுநர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாகத் திட்டம்.
மாலை 4.30 மணிக்கு ஆளுநரின் கார் திண்டிவனத்திற்குள் நுழைந்தது. வீராணம் இல்லம் நோக்கி வந்த காரை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
கற்கள், அழுகிய முட்டை, தேங்காய் மட்டை போன்றவை சரமாரியாக வீசப்பட்டன.
இன்னொரு பக்கம், அதிமுகவினரை அப்புறப்படுத்த விழுப்புரம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலிசார் கடும் பிரயத்தனம் செய்தனர்.
இந்த சம்பவங்கள் சுமார் அரைமணி நேரம் நீடித்தன.
இவ்வளவுக்கும், ஆளுநர் சென்னா ரெட்டி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.
பின்னர் அவர் புதுவை புறப்பட்டார். புதுவை சாலையில் கூட இந்த எதிர்ப்பு தொடர்ந்தது. இன்னும் சிறிது தூரத்தில் நின்றிருந்த திமுகவினர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து, பின்னாளில் திமுகவில் இணைந்த, எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்த பேட்டியில், “ஒரு வேகத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோமே தவிர சிந்திக்கும் நிலையில் செயல்படவில்லை” என விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கில் இவர் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
(இணைப்பில் உள்ள தினகரன் செய்தியில், 4 எம்.எல்.ஏ. தலைமையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. அப்போது சட்டசபை நடந்த நேரம். குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தான் இருந்தனர். இந்த செய்தி குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக நினைவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக