“அண்ணாச்சி” என்று தான் அழைத்துப் பழக்கம். அதனால் இவரதுப் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது.
1990களின் தொடக்கத்தில், விழுப்புரம், மருதூர் பகுதியில் நாங்கள் வசித்த போது இவரும் இவரதுத் தம்பியும் பழக்கம். மளிகைக் கடை வைத்திருந்தனர்.
அப்புறம் இவர், கன்னியர்குளம் சாலையில் ஐஸ்கிரீம் கடை வைத்தார். நமக்கும் வீடு வெகு அருகில் தான்.
ஒவ்வொரு முறையும் கடையைக் கடக்கும் போதும் பார்ப்பேன்: டேபிளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். படித்துக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் சரித்திர நாவலாக இருக்கும். கடையில் அமர்ந்திருக்கும் இவர் மனைவியும் படித்துக்கொண்டு இருப்பார்.
அடிக்கடி என்னிடமும் புத்தகங்கள் குறித்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்.
சமணர் கழுவேற்றம் நூலாக்கத்தின் போது “அஞ்ஞாடி” நாவலை இவரிடமே பெற்றேன்.
லாக்டவுன்: மருதூரில் உள்ள இவர் வீட்டிற்குச் செல்ல வழிசெய்தது.
தமிழ்ச்செல்வம். “உங்களுக்கு வாசிப்பு வழக்கம் எப்படிங்க அண்ணாச்சி?” கேட்டேன்.
"90 களின் தொடக்கத்தில் என் முதல் மனைவி காலமாயிட்டாங்க. மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டு எனக்குள்ளேயே முடங்கிட்டேன் சார்.
அப்பதான் உலக.துரை வாத்தியார், மனசுக்கு ஓய்வா இருக்கும் ன்னு சில புத்தகங்களைக் குடுத்தாரு. அப்புறம் அரசு நூலகத்துக்குப் போனேன். புத்தகங்களே கதின்னு கிடந்தேன். எனக்குள் நிறைய மாற்றங்கள்.
அன்னிக்கி ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் படிக்கிறத விடல”.
இவரது சேகரிப்பில் எப்படியும் அறுநூறு எழுநூறு புத்தகங்கள் இருக்கும்.
ஆண்டு தோறும் நடக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குத் தவறாமல் போய்விடுவார். அள்ளி வருவார். பெரும்பாலும் நாவல்கள் தாம்.
நூல்கள் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதற்கு இவர் தயங்குவதில்லை.
இவரது நடவடிக்கைக்கு இவர்தம் மனைவியும் மக்களும் துணையாக நிற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
அண்ணாச்சியின் சொந்த ஊர், சிவகாசி அருகாமையில் இருக்கிற, விளாம்பட்டி கிராமம். நாடார் உறவின் முறை.
இப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விளாம்பட்டிக்காரர் மட்டுமல்ல: அண்ணாச்சியுடன் 5ஆவது வரைக்கும் ஒன்றாகப் படித்தவராம்!
சரி, இவ்வளவு ஆர்வமா புத்தகங்களைப் படிக்கிற நம்ம அண்ணாச்சி எத்தனையாவது வரைக்கும் படிச்சிருக்காராம்?
“எட்டாவது வரைக்கும் தான் நம்ம படிப்பு” பெருமிதத்துடன் சொல்கிறார் தமிழ்ச்செல்வம்!
(இவரதுத் தொடர்பு எண்: 94439 87245)
1990களின் தொடக்கத்தில், விழுப்புரம், மருதூர் பகுதியில் நாங்கள் வசித்த போது இவரும் இவரதுத் தம்பியும் பழக்கம். மளிகைக் கடை வைத்திருந்தனர்.
அப்புறம் இவர், கன்னியர்குளம் சாலையில் ஐஸ்கிரீம் கடை வைத்தார். நமக்கும் வீடு வெகு அருகில் தான்.
ஒவ்வொரு முறையும் கடையைக் கடக்கும் போதும் பார்ப்பேன்: டேபிளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். படித்துக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் சரித்திர நாவலாக இருக்கும். கடையில் அமர்ந்திருக்கும் இவர் மனைவியும் படித்துக்கொண்டு இருப்பார்.
அடிக்கடி என்னிடமும் புத்தகங்கள் குறித்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்.
சமணர் கழுவேற்றம் நூலாக்கத்தின் போது “அஞ்ஞாடி” நாவலை இவரிடமே பெற்றேன்.
லாக்டவுன்: மருதூரில் உள்ள இவர் வீட்டிற்குச் செல்ல வழிசெய்தது.
தமிழ்ச்செல்வம். “உங்களுக்கு வாசிப்பு வழக்கம் எப்படிங்க அண்ணாச்சி?” கேட்டேன்.
"90 களின் தொடக்கத்தில் என் முதல் மனைவி காலமாயிட்டாங்க. மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டு எனக்குள்ளேயே முடங்கிட்டேன் சார்.
அப்பதான் உலக.துரை வாத்தியார், மனசுக்கு ஓய்வா இருக்கும் ன்னு சில புத்தகங்களைக் குடுத்தாரு. அப்புறம் அரசு நூலகத்துக்குப் போனேன். புத்தகங்களே கதின்னு கிடந்தேன். எனக்குள் நிறைய மாற்றங்கள்.
அன்னிக்கி ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் படிக்கிறத விடல”.
இவரது சேகரிப்பில் எப்படியும் அறுநூறு எழுநூறு புத்தகங்கள் இருக்கும்.
ஆண்டு தோறும் நடக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குத் தவறாமல் போய்விடுவார். அள்ளி வருவார். பெரும்பாலும் நாவல்கள் தாம்.
நூல்கள் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதற்கு இவர் தயங்குவதில்லை.
இவரது நடவடிக்கைக்கு இவர்தம் மனைவியும் மக்களும் துணையாக நிற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
அண்ணாச்சியின் சொந்த ஊர், சிவகாசி அருகாமையில் இருக்கிற, விளாம்பட்டி கிராமம். நாடார் உறவின் முறை.
இப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விளாம்பட்டிக்காரர் மட்டுமல்ல: அண்ணாச்சியுடன் 5ஆவது வரைக்கும் ஒன்றாகப் படித்தவராம்!
சரி, இவ்வளவு ஆர்வமா புத்தகங்களைப் படிக்கிற நம்ம அண்ணாச்சி எத்தனையாவது வரைக்கும் படிச்சிருக்காராம்?
“எட்டாவது வரைக்கும் தான் நம்ம படிப்பு” பெருமிதத்துடன் சொல்கிறார் தமிழ்ச்செல்வம்!
(இவரதுத் தொடர்பு எண்: 94439 87245)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக