பிரபல பத்திரிகையான தினகரனில் நாம் நிருபரானதும் தோழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!
இந்த மகிழ்ச்சியின் ஊடாகத்தான், நில அளவைத் துறையில் பணியாற்றிய தோழர் பழனி (இப்போதும் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்) அழகானப் பெயர்ப் பலகையை அப்போது (1993) செய்து கொடுத்தார்.
விழுப்புரம், மருதூர், குப்புசாமி நெடுந்தெருவில் வசித்து வந்த வீட்டை இந்த பெயர்ப் பலகை ஆண்டுகள் பல அலங்கரித்தது.
பெயர்ப் பலகை எனும் போது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
குப்புசாமி நெடுந்தெருவைத் தொடர்ந்து, கன்னியர்குளம் சாலை, சிவராமன் லேஅவுட்டிற்குக் குடி பெயர்ந்தோம். திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தேன்.
ஆறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் நமக்கும் சின்ன சின்ன உரசல்கள்.
அதில் ஒன்று, பெயர்ப் பலகை.
நாம் இருந்தது வீட்டின் பக்கவாட்டில் உட்புறமாக. முன்புறம், உரிமையாளர் வீட்டின் முகப்பில் பெயர்ப் பலகையை மாட்டியிருந்தோம்.
தேடி வரும் பலரும், அங்கு வந்துதான் “நிருபர் இருக்கிறாரா?” என கேட்பார்கள். பிரச்சினை இல்லாத வரையில் வீட்டு உரிமையாளருக்கு இது பிரச்சினையாகத் தெரியவில்லை.
பிரச்சினை வந்தவுடன், இப்படி பலரும் விசாரிப்பது அவருக்குத் தலைவலியாகப் போய்விட்டது.
ஒருநாள், சத்தம் போடாமல் பெயர்ப் பலகையைக் கழட்டி அவர் வீட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவர் தான் கழட்டியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரிடம் கேட்கவில்லை.
நகர காவல் நிலையத்திற்குச் சென்றேன். “ரூ.150 மதிப்புள்ள என் பெயர்ப் பலகையைக் காணவில்லை. வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் இருக்கிறது” எனப் புகார் கொடுத்தேன்.
இதை சீரியசாக எடுத்துக் கொண்ட நம் நண்பர்களும், புகாரில் பேரில் உரிமையாளரை நிலையம் வரவழைத்து விசாரித்தனர்.
விசாரணையில், தான் தான் அந்தப் பலகையை கழட்டி வைத்து இருப்பதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர் உடனடியாக வீட்டுக்கு வந்து என்னிடம் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து காலி செய்துவிட்டோம் என்பது வேறு விஷயம்..!
இந்த மகிழ்ச்சியின் ஊடாகத்தான், நில அளவைத் துறையில் பணியாற்றிய தோழர் பழனி (இப்போதும் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்) அழகானப் பெயர்ப் பலகையை அப்போது (1993) செய்து கொடுத்தார்.
விழுப்புரம், மருதூர், குப்புசாமி நெடுந்தெருவில் வசித்து வந்த வீட்டை இந்த பெயர்ப் பலகை ஆண்டுகள் பல அலங்கரித்தது.
பெயர்ப் பலகை எனும் போது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
குப்புசாமி நெடுந்தெருவைத் தொடர்ந்து, கன்னியர்குளம் சாலை, சிவராமன் லேஅவுட்டிற்குக் குடி பெயர்ந்தோம். திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தேன்.
ஆறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் நமக்கும் சின்ன சின்ன உரசல்கள்.
அதில் ஒன்று, பெயர்ப் பலகை.
நாம் இருந்தது வீட்டின் பக்கவாட்டில் உட்புறமாக. முன்புறம், உரிமையாளர் வீட்டின் முகப்பில் பெயர்ப் பலகையை மாட்டியிருந்தோம்.
தேடி வரும் பலரும், அங்கு வந்துதான் “நிருபர் இருக்கிறாரா?” என கேட்பார்கள். பிரச்சினை இல்லாத வரையில் வீட்டு உரிமையாளருக்கு இது பிரச்சினையாகத் தெரியவில்லை.
பிரச்சினை வந்தவுடன், இப்படி பலரும் விசாரிப்பது அவருக்குத் தலைவலியாகப் போய்விட்டது.
ஒருநாள், சத்தம் போடாமல் பெயர்ப் பலகையைக் கழட்டி அவர் வீட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவர் தான் கழட்டியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரிடம் கேட்கவில்லை.
நகர காவல் நிலையத்திற்குச் சென்றேன். “ரூ.150 மதிப்புள்ள என் பெயர்ப் பலகையைக் காணவில்லை. வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் இருக்கிறது” எனப் புகார் கொடுத்தேன்.
இதை சீரியசாக எடுத்துக் கொண்ட நம் நண்பர்களும், புகாரில் பேரில் உரிமையாளரை நிலையம் வரவழைத்து விசாரித்தனர்.
விசாரணையில், தான் தான் அந்தப் பலகையை கழட்டி வைத்து இருப்பதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர் உடனடியாக வீட்டுக்கு வந்து என்னிடம் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து காலி செய்துவிட்டோம் என்பது வேறு விஷயம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக