ஞாயிறு, 1 அக்டோபர், 2017

படைப்பாளிகளை அமரவைத்துச் சிறப்புசெய்தனர்...

நல்ல விசயம்தான்... நேற்று சிறப்பாகவே நடந்தேறியது!

விழுப்புரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பிலான புத்தகக் கண்காட்சியில், தினம் தினம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

அந்த வகையில், விழுப்புரம் படைப்பாளர்களுக்கானப் பாராட்டு விழா நேற்று (ஞாயிறு) மாலை நடந்தது.

இதில், உங்கள் செங்குட்டுவன் உள்பட, 25 படைப்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.

படைப்பாளிகளை இருக்கையில் அமர வைத்து, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நின்று கொண்டுச் சிறப்பு செய்தனர் என்பது இங்குச் சிறப்புச் செய்தியாகும்.


படைப்பாளர்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. ஓரளவு சிறப்பாக செய்து முடித்ததாகக் கருதுகிறேன்.

இடையிலே, சங்க காலத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்த தமிழ்ப் படைப்பாளர்கள், இன்று பதிப்பாளர்களையும், அரசு நூலகங்களையும் நம்பியிருக்க வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.


இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள்.

இதற்காக, விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தங்க.கணேச.கந்தன், கே.பாலகுரு நாதன், பி.நம்மாழ்வார் உள்ளிட்ட அனைவருக்கும் படைப்பாளர்கள் சார்பிலே நன்றி..!

நண்பர்களே, கடந்த ஒருவார காலமாக நடந்துவந்த விழுப்புரம் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகின்றது!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக