குமுதம் ரிப்போர்ட்டரின் ஒவ்வொரு இதழிலும்,
தமிழகத்தின் அமைச்சர்களின் தொகுதி குறித்து ஆய்வு செய்து, ‘உங்கள் அமைச்சரை
அரியும் தொடர்’ எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு
வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு
என்னைத் தொடர்புக் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் திரு.பெ.கோவிந்தராஜு
அவர்கள், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான
திரு.சி.வி.சண்முகம் அவர்களது செயல்பாடுக் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது, ‘விழுப்புரம் நகரில் பல பகுதிகளில்
குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது, முடங்கிப் போயிருக்கும் பாதாள சாக்கடைத்
திட்டம், சீரமைக்கப்படாமல் இருக்கும் கோலியனூரான் கால்வாய், பாழடைந்துக் கிடக்கும்
பழைய பஸ் நிலையம், தீர்க்கப்படாமல் இருக்கும் நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை’ ஆகியவற்றைப் பட்டியலிட்டேன்.
மேலும், ‘எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை நாங்கள்
நினைத்த மாத்திரத்தில் சந்திக்க வேண்டும். இதற்கு, குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக
ஏதாவது செய்யுங்களேன்’ என்று வேடிக்கையாகவும் (வேதனையுடனும்
தான்!) குறிப்பிட்டேன்.
இன்று (10.10.17) வெளியாகியிருக்கும் குமுதம்
ரிப்போர்ட்டர் இதழில், விழுப்புரம் தொகுதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
சிறப்பாகவே அலசி இருக்கிறார்கள்.
இதில், என்னுடைய பேட்டியும், படத்துடன்
வெளியாகியிருக்கிறது.
16 வருடங்களுக்கு முன்பு நான் நிருபராகப்
பணியாற்றிய பத்திரிகையில், இப்போது
என்னுடைய பேட்டி... மகிழ்ச்சிதான்..!
நன்றி, திரு.பெ.கோவிந்தராஜு அவர்களே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக