விழுப்புரம் மேம்பாலப் பணி முடிவடைந்து
எப்படியும் ஒரு மாதம் ஆகியிருக்கலாம். வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கி
வருகின்றன. மகிழ்ச்சி.
எப்படியே துரித கதியில் இந்தப் பணியை
முடித்துவிட்டார்கள்.
ஆனால், கோலியனூரான் கால்வாய்..?
மேம்பாலத்துக்கு அடியில் புதியக் கால்வாய்
அமைக்கப்பட்டுவிட்டது.
இரயில் பாதைக்கு அடியில் செல்லும் கால்வாய்
முழுமையாகத் தூர் வாரப்பட வில்லை.
இரயில் நிலையத்தின் கிழக்கில், மூடப்பட்டுப்
பின்னர்த் திறக்கப்பட்டக் கால்வாயும் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.
கண்ணன் தியேட்டர் அருகில் தடுத்து
நிறுத்தப்பட்டக் கால்வாயும் அந்தப்படியே நிற்கிறது. போதாக்குறைக்கு, அதற்கு
இரும்புக் வேலி வேறு! தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க!
இரயில் பாதைக்கு அடியில் கால்வாய் எப்போது
சீரமைக்கப் பெறும்? கிழக்குப் பகுதியில் கால்வாய் சீர் செய்யப்படுவது
எப்போது?
இவையெல்லாம் முடிந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு
சந்துப் பகுதியில் கோலியனூரான் கால்வாய் எப்போது திறந்துவிடப்படும்?
பொதுப்பணித்துறைக்கே வெளிச்சம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக