விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில்,
காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த சில நாள்களாக, மாணவ மாணவியருக்குப் பல்வேறு
போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, பேச்சுப் போட்டியானது, இன்று
பிற்பகல் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இப்போட்டியை ஒருங்கிணைக்கும் நடுவர்களில்
ஒருவராக இருக்குமாறு, பள்ளி நிர்வாகி திருவாளர் இல.இரவீந்திரன் அவர்கள் என்னைக்
கேட்டுக் கொண்டார்.
ஆஹா..! மகிழ்ச்சியான விசயம், ஏற்றுக் கொண்டேன்.
கவிஞர் திருவாளர் விக்கிரமன் அவர்களும், பள்ளி
ஆசிரியை திருமதி ஹேமலதா அவர்களும் நடுவர்களாக வீற்றிருந்தனர்.
இவர்களுக்கு நடுவில் நான்!
பரவாயில்லை மாணவர்கள் பொளந்துக் கட்டினார்கள்.
பலரும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய
குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள். ஒரு மாணவனின் சட்டையில், கையின் ஓரம் துணி
கிழிந்திருப்பதைக் கண்டேன்.
அவர்கள் வாழ்க்கையில் வறுமை இருக்கலாம். ஆனால்
அவர்களின் உள்ளத்தில் வெறுமை இல்லை என்பதை அவர்களது பேச்சுகள் எடுத்துக்காட்டியது.
மகாத்மா காந்தி குறித்துச் சிறப்பாகவே
பேசினார்கள். அவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முடிவுகளையும் அங்கேயே அறிவித்தோம்.
அம்மாணவர்களை வாழ்த்திப் பேசிய நான்,
விழுப்புரம் மாவட்டத்தில் காந்தியின் சுவடுகள் குறித்து நினைவுகூர்ந்தேன்.
மேலும், ‘மகாத்மா காந்தியை நாம் யாரும்
பார்த்தது கிடையாது. ஆனால் அவர் பெயரைத் தாங்கியப் பள்ளியில் படிக்கிறீர்கள்
என்பதே பெருமிதத்திற்குரியதுதான்’ என்று சொன்னபோது, அதனைக் காதைப்
பிளக்கும் கைத்தட்டல் சப்தத்துடன் மாணவர்கள் அங்கீகரித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று
(6.10.17) மாலை பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
நன்றி, திரு.இரவி சார்..!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக