திங்கள், 11 டிசம்பர், 2017

மீண்டு(ம்) வருகிறதா சின்ன கடைத்தெரு?

சின்ன கடைத்தெரு.

இப்படியானக் கடைத்தெருக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. விழுப்புரமும் இதற்கு விதிவிலக்கல்ல.

சிறுவயதில், கண்ணப்பநாயனார் தெருவில் குடியிருந்தபோது, எதற்கெடுத்தாலும் நாங்கள் விரட்டப்பட்டது, சின்ன கடைத்தெருவுக்குத்தான்.

ஊருக்குப் பெரிய மார்க்கெட் என ஒன்று இருந்தாலும், எங்களுக்குப் பிரதானம் சின்ன கடைத்தெருதான்.

எல்லா காய்கறிகளும், பழங்களும், மளிகைப் பொருள்களும் இங்கு அடக்கம்.

நேரு வீதியில் உழவர் சந்தைத் தொடங்கப்பட்டது. சந்தானகோபாலபுரம் நெடுந்தெரு, தன் முகத்தை இழக்கத் தொடங்கியது. சின்ன கடைத்தெரு மெல்ல மெல்லக் கரைந்தே போனது.

எதிரிலேயே பிரம்மாண்டமாக எழுந்துநின்ற, உழவர் சந்தையை சின்ன கடைத் தெருவினால் தாக்குப் பிடிக்க முடியாதது வரலாற்றுச் சோகம்தான்!

இப்போது, உழவர் சந்தைக்கு எதிரே, வரிசையாக அமர்ந்து காய்கறி கீரைகளை விற்பவர்களைக் காணமுடிகிறது.


எல்லோரும் விழுப்புரம் சுற்றுவட்டக் கிராமங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள்.

இக்காட்சியைப் பார்க்கும்போது, சின்ன கடைத்தெரு மீண்டு(ம்) வருகிறதோ எனும் சந்தோசத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக