“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.” (855)
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா?
எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.
இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.
பக்கங்கள்: 168 விலை: ரூ.150.
இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.
எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!
இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.
(ஏற்கனவே முகநூலில், திரு.ஜடாயு அவர்களும், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் விவாதத்தை தொடங்கிவிட்டார்கள்)
நன்றி:
திரு.ஜடாயு அவர்கள்.
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக