வெள்ளி, 8 டிசம்பர், 2017

விழுப்புரம் திமுக அலுவலகம் அகற்றம்

விழுப்புரம் நேரு வீதியைக் கடப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இங்கிருந்தக் கட்டடங்கள் எங்கே? அவர்களின் கண்கள் அகல விரிவதைப் பார்க்க முடிகிறது.

வரிசையாக, ஆண்டுக் கணக்கில் நின்று கொண்டிருந்த நகர திமுக அலுவலகம் உள்ளிட்ட

கட்டடங்கள், நீர்வழித் தட ஆக்கிரமிப்பு எனும் காரணத்தினால் அகற்றப்பட்டுள்ளன.  



நகரத்தின் மையப் பகுதியில் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு, இத்தனை நாள் அரசாங்கத்தின் பார்வையில் படாமல் போனது எப்படி? எனும் கேள்வி எழுகிறது.

ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களே ஆக்கிரமித்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? சரி, இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே... வரவேற்போம்.

மழைக் காலங்களில் நேரு வீதியில் இந்த இடத்தில் மட்டும் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. இப்போது இதற்குத் தீர்வு காணப்படும் என நம்புவோம்.


அதே நேரம் முக்கிய வடிகாலான ஊரல் குட்டை ஏறக்குறைய தூர்க்கப்பட்டுவிட்டது. சாலையைக் கடந்து எதிரே வழிந்தோடும் பாதையிலும் குடியிருப்புகளாக்கி, சிமெண்ட் ரோடும் போடப்பட்டாகிவிட்டது.

இந்த நிலையில், ஒரு தடத்தை மட்டும் மீட்டெடுத்தால் போதுமா? நீர்நிலையைப் புனரமைக்க என்ன செய்யப்போகிறார்கள்?

இதுபற்றிப் பேசும்போது, விழுப்புரம் புதிய பஸ் நிலையமும் நம் கண்முன் வருகிறது. இங்கிருந்து மழைநீர் வெளியேறும் வடிகால்கள் அனைத்தும் பிரம்மாண்டக் கட்டடங் களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவே.


இவற்றின் மீதும் அரசாங்கத்தின் பார்வை படுமா? பொறுத்திருந்துப் பார்க்கலாம்..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக