வெள்ளி, 29 டிசம்பர், 2017

சிறகடித்துப் பறக்கும்...

அண்மையில் சென்னை திருவான்மியூர் சென்றிருந்த நான், அங்குள்ள புகழ்ப் பெற்ற அருள்மிகு மருந்தீசுவரர்க் கோயிலுக்குள் வலம் வந்தேன்.

ஏராளமானக் கல்வெட்டுகள், சிற்பங்கள். அம்பிகையின் வளாகத்துக்கு வெளியே, 19ஆம் நூற்றாண்டைய குறிப்பிட்ட வகுப்பினரின் சாசனங்கள் என வரலாற்று விவரங்கள் கோயிலில் விரவியுள்ளன. நீங்களும் அறிந்திருப்பீர்கள்!  

ஆனாலும், என் கவனத்தை, என் கவனத்தை மட்டுமல்ல அங்கு வந்திருந்தவர்களின் கவனங்களைப் பெரிதும் கவர்ந்தவை, வளாகத்துக்குள் படபடவெனச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்தப் புறாக்கள்தாம்.

கோயிலுக்கு வருபவர்களில் சிலர் கையோடு தானியங்களைக் கொண்டு வருகின்றனர். அவற்றை வளாகத்துக்குள் பரப்புகின்றனர்.

இதோ, அவற்றினைச் சுற்றி வளைக்கும் அந்தப் புறாக்கள், (இதில் சில காகங்களும் அடக்கம்) ஆவலுடன் கொத்தித் தின்கின்றன.

யாரும் அருகில் வரும் சமயத்தில், படபடவெனச் சிறகையடித்து (தற்காலிகமாக) அங்கிருந்துப் பறக்கின்றன.


இக்காட்சியினை அழகியலோடு படம் பிடித்தவர்களின் நானும் ஒருவன். அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக...  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக