1991இல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஜெயலலிதா எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் தொடங்கியது!
முன்பெல்லாம், காவல் நிலையங்களில் மகளிர் போலீசாருக்கென ஒரு பிரிவு (விங்) இருந்தது.
இப்போது, இவர்களுக்கு முழுநேரக் காவல் நிலையம்.
விழுப்புரத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இங்கு அங்கு என்று இடம் தேடி அலைந்தனர்.
இறுதியில், தாலுகா காவல் நிலைய வளாகத்திலேயே இடம் தேர்வானது.
அது, தாலுகா இன்ஸ்பெக்டர் குடியிருப்பாக இருந்தக் கட்டடம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் (ஜீவேந்திரன்) குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழாவுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வருவதாகச் சொல்லி, ஹெலிபேடுக்கான இடம் தேடி அலைந்தனர்.
ஆனால், முதல்வர் வரவில்லை.
அன்றைய டிஜிபி எஸ். ஸ்ரீபால்,
08.09.1994 அன்று மாலை 'விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்'தினைத் திறந்து வைத்தார்.
இப்போது, அதே வளாகத்தில் இக்காலத்தில் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது விட்டது.
இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் அலுவலகம் என பல்வேறு அவதாரம் எடுத்த அந்தக் கட்டடம் காலப்போக்கில் மறைந்துவிட்டது.
இப்போது அந்த இடத்தில் தான், தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டடம் நின்று கொண்டு இருக்கிறது!
முன்பெல்லாம், காவல் நிலையங்களில் மகளிர் போலீசாருக்கென ஒரு பிரிவு (விங்) இருந்தது.
இப்போது, இவர்களுக்கு முழுநேரக் காவல் நிலையம்.
விழுப்புரத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இங்கு அங்கு என்று இடம் தேடி அலைந்தனர்.
இறுதியில், தாலுகா காவல் நிலைய வளாகத்திலேயே இடம் தேர்வானது.
அது, தாலுகா இன்ஸ்பெக்டர் குடியிருப்பாக இருந்தக் கட்டடம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் (ஜீவேந்திரன்) குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழாவுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வருவதாகச் சொல்லி, ஹெலிபேடுக்கான இடம் தேடி அலைந்தனர்.
ஆனால், முதல்வர் வரவில்லை.
அன்றைய டிஜிபி எஸ். ஸ்ரீபால்,
08.09.1994 அன்று மாலை 'விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்'தினைத் திறந்து வைத்தார்.
இப்போது, அதே வளாகத்தில் இக்காலத்தில் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது விட்டது.
இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் அலுவலகம் என பல்வேறு அவதாரம் எடுத்த அந்தக் கட்டடம் காலப்போக்கில் மறைந்துவிட்டது.
இப்போது அந்த இடத்தில் தான், தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டடம் நின்று கொண்டு இருக்கிறது!