புதன், 5 செப்டம்பர், 2018

நான் வாத்தியார் மகனென்பதில்...




வாத்தியார்…

இவர் மிகவும் கண்டிப்பானவர்.

குறும்பு செய்யும் மாணவர்களின் காதைத் திருகித் தண்டனை கொடுப்பது இவரது தனிச்சிறப்பு.

இதுபற்றி மாணவர்கள் தமதுப் பெற்றோரிடம் புகார் சொன்னால்
' வாத்தியார் செய்ததில் நியாயம் இருக்கும்' என்பார்களாம்.

இவரிடம் திருகு வாங்கிய முன்னாள் மாணவர்கள் பலரும் இந்நாளிலும் நினைவுகூரக் கேட்டதுண்டு.

கண்டிப்பு, மாணவர்களிடம் மட்டுமில்லை. அதிகாரிகளிடமும். எதிலும் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும் என்பார்.

இதனால், விழுப்புரம்
ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில்
சி.கே. (சி.கோதண்டம்) வுக்கு தனி மரியாதை!

முறுக்கிய மீசையுடன் தூய கதராடையில்
வாத்தியார் நடந்துவரும் கம்பீரமே தனி அழகு!

சிறு வயதில்
இவர் கை விரல்களைப் பற்றி வீதியில் நடந்தபோதும்
இப்போதும், ஏன் எப்போதுமே
எனக்குப் பெருமிதம் தான்…

நான் வாத்தியாரின் மகனென்று…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக