இணைப்பில் நீங்கள் பார்ப்பது…
நீராழி மண்டபம்
விசுவரூப ஆஞ்சநேயர்
திருமேனி பாதுகாப்பு மையம்
என எந்த ஆக்கிரமிப்பினாலும் பாதிக்கப்படாத,
இயல்பான, விழுப்புரம் ஐயனார் குளம்.
1990களின் தொடக்கத்தில் நான் எடுத்தப் புகைப்படம்.
விழுப்புரம் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் அழகான நீர்ப்பிடிப்பு பகுதி.
ஐயனார் குளமாக? ஆஞ்சநேயர் குளமா? மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமல்ல அரசாங்கத்தின் ஆவணங்களும் சொல்கின்றன: இது ஐயனார் குளம் என்று.
இதனை ஆக்கிரமிக்கவும் மீட்கவுமான எத்தனை முயற்சிகள் காலந்தோறும் நடந்து வந்திருக்கின்றன?
நீண்ட வரலாறு கொண்டது விழுப்புரம் ஐயனார் குளம்.
'இது அரசுக்குச் சொந்தமான இடம் தான்'. பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2000ஆம் தொடக்கத்தில், 'இது நகராட்சிக்கு சொந்தமான இடம். ஆக்கிரமிப்போர் தண்டிக்கப்படுவார்கள்' என குளத்தைச் சுற்றிலும் பேனர்கள் வைக்கப்பட்டதை யாரும் மறக்க இயலாது.
என்ன இருந்தாலும் என்ன செய்வது?
குளம் சீரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா அமைக்கப்படும்,
மழைநீர் சேகரிப்பு மையமாக இருக்கும் என்பது போன்ற கடந்த கால அறிவிப்புகள் காற்றில் கரைந்து விட்டன.
குளத்தின் ஒரு பக்கம் கடைகளைக் கட்டி வசூல் செய்கிறது நகராட்சி.
இன்னோரு பக்கத்தில் இல்லாத சொந்தத்தைக் கொண்டாடி வாடகை வசூலிக்கிறது அறநிலையத்துறை.
இதற்கிடையில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு திணிக்கப்படுமோ அங்கெல்லாம் மெல்ல மெல்லத் ஆக்கிரமிப்புகளும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இதில் ஒரு சதவீதம் கூட குளத்தின் பராமரிப்பில் காட்டப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
விழுப்புரம் நகரத்தின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்.
அப்படியானால், ஐயனார் குளம் மட்டுமல்ல நகரத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக