வியாழன், 18 ஜூலை, 2019

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு வாழ்த்துகள்...

எனக்குள் ஆச்சரியம்தான்..! எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது?

“நிர்வாகச் சீர்கேட்டிற்கு நீங்கள் தான் காரணம்”
மாவட்ட நிர்வாகத்தின் உயர்ந்த, முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை நோக்கி, இவரால் எப்படி சுட்டுவிரல் நீட்ட முடிகிறது?

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.த.குமாரவேல் அவர்கள்.



விழுப்புரத்தில் பணியேற்று பத்து மாதங்கள் தான் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீர் இடமாறுதல். அதுவும் மாற்று இடம் எதுவுமில்லை. காத்திருப்போர் பட்டியலில்!

அப்போது தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.டி.ஓ. அவர்கள், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டினார்.

அதே கையோடு சென்னை உயர்நீதிமன்றம் சென்ற அவர், தனது பணி மாறுதல் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை உத்தரவும் பெற்றார்.

அதே வேகத்தில், தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தார்.

எனக்கும், எல்லோருக்கும் ஆச்சரியந்தான்.
எப்படி இவரால் உறுதியாக நிற்க முடிகிறது?

அப்போது தான் வருவாய்த் துறையில் இருக்கும் நண்பர்கள் சொன்னார்கள்:
 “அவர் கை சுத்தம்.”

இப்படியான நேர்மையான அதிகாரியை, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை நேற்று நேரில் சந்தித்தேன்.


கரங்களை இறுகப் பற்றி பாராட்டினேன்.

வாழ்த்துகள் ஆர்.டி.ஓ. சார்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக