செவ்வாய், 30 ஜூலை, 2019

அருங்காட்சியகங்கள் இயக்குநருடன் சந்திப்பு...

நினைவூட்டல்... அதுவும் அரசுக்கு நினைவூட்டல் என்பது தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை தான்...

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் மதிப்பிற்குரிய செல்வி.கவிதா ராமு ஐ.ஏ.எஸ். அவர்களை,

சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று 30.07.2019 செவ்வாய் காலை சந்தித்தேன்.


விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அவரிடம் பட்டியலிட்டேன்.

ஏராளமான வரலாற்றுத் தரவுகள் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.

பொறுமையுடன் கேட்டறிந்தார்.

எனது, அருங்காட்சியகம் அவசியமும் அவசரமும், நூலினைக் கொடுத்த போது வியந்தார்!

" இந்த விசயங்கள் நிச்சயம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

இன்னமும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறோம். இருப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக