சனி, 20 ஜூலை, 2019

புதுச்சேரி அரசைப் பாராட்டலாம்...

நல்ல விசயம் தான்… பாருங்கள்…

புதுச்சேரியில், இரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் நீண்ட சாலையின் முந்தைய பெயர்: தெற்கு புல்வார் தெரு.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்த வீதியின் பெயர் மாற்றப்பட்டது. புதுச்சேரியின் மக்கள் தலைவராக விளங்கிய, பிரெஞ்சிந்திய சுதந்தரப் போராட்ட வீரர் வி.சுப்பையா அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.


பெயர் பலகை வைத்ததோடு நில்லாமல், வி.சுப்பையா அவர்கள் குறித்தும், அவரோடு களத்தில் நின்ற அவரது மனைவி சரஸ்வதி சுப்பையா அவர்கள் குறித்தும் வாழ்க்கைக் குறிப்புகள் வீதியில் ஆங்காங்கே சலவைக் கற்களில், ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதப்பட்டுள்ளன.


அதோடு அந்த வீதியின் பழைய (பிரெஞ்சு) பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

ஏதோ தலைவர்களின் பெயர்களை வைத்தோம் என்று இல்லாமல், அவர்கள் குறித்தக் குறிப்புகளும் நம் கண்களில் படுகிறது..!

நல்ல விசயம் தான்… புதுச்சேரி அரசை (இதை யார் செய்து இருந்தாலும்) நாம் பாராட்டத்தான் வேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக