அடடா... ஒரே இடத்தில் இத்தனை உறைகிணறுகளா..?
வாதானூர்...
புதுவை எல்லையில் அமைந்துள்ள தமிழகக் கிராமம். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.
இங்கிருக்கும் அத்திக்குளம். இதில் தான் இந்த அதிசயம்... கண்களுக்கு எட்டியவரையில் எப்படியும் 20க்கும் மேற்பட்ட உறைகிணறுகள். இன்னும் இன்னும் ஏராளமாக இருக்கக்கூடும்!
நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளத்தைச் சீரமைக்கும் போது தான் இந்த உறைகிணறுகள் வெளிப்பட்டு இருக்கின்றன.
இவற்றின் காலம், சங்ககாலம் என்று சொல்லலாம். ஆம். 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை.
நீரைத் தேக்கி வைக்கவும் தேக்கி வைத்த நீரை தெளிய வைத்து அருந்தவும் ஆன ஒரு ஏற்பாடு தான் இந்த உறைகிணறுகள்!
ஒரே இடத்தில் இத்தனை உறைகிணறுகளா? நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளன இந்த உறைகிணறுகள். இந்த இடத்தில் இன்னமும் கூட நிறைய இருக்கலாம்! இருக்கின்றன. “உங்கள் பணி இவற்றை சிதைக்காமல் இருக்கட்டும்” நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டேன்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் கூட இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த உறைகிணறுகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இத்தருணத்தில் உரிய நேரத்தில் தகவல் அளித்த ஐயா அண்ணமங்கலம் முனுசாமி, உடன் இருந்து ஒத்துழைத்த வாதானூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.இளவரசன் ஆகியோருக்கும், வரலாற்றை ஆர்வமுடன் கேட்டறிந்த கிராமப் பொதுமக்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றிகள்..!
தினத்தந்தி
21.07.23
https://m.dinamalar.com/detail-amp.php?id=3381730
இந்து தமிழ் திசை
22.07.23
தினகரன்
23.07.23
தினமணி
24.07.23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக