1991 ஜுன் மாதத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல் மிகவும் தீவிரமாக நடந்து வந்தது.
இதனைக் கண்டித்து நெம்புகோல் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் திமுக பிரமுகர் பி.செல்லையன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழல் இல்லாமல் போய்விட்டது.
இதற்கிடையில் நாங்கள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரசார் தகவல் பரப்பினர். இதனைக் கண்டித்தும் மாற்று தேதியை அறிவித்தும் நெம்புகோல் செயற்குழு உறுப்பினரான எனது அறிக்கை,
29.06.1991 தினகரன் நாளிதழில் "செங்குட்டுவன் அறிக்கை" என்றே தலைப்பிடப்பட்டுச் சிறப்பாக கீழ்க்காணும் பிரசுரமானது: ஆனால் எனக்கு அப்போது தெரியாது, அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பத்திரிகைக்கு நாம் செய்தியாளர் ஆவோம் என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக