1991 மே 21இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்...
இதனைத் தொடர்ந்து ஈழப்போராளிகளை விமரிசித்து "கணையாழி" மே மாத இதழில் கட்டுரை ஒன்று வெளியானது.
அந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட கடிதம் ஒன்றினைக் கணையாழிக்கு எழுதினேன்.
அப்போது என் கையெழுத்து நன்றாகவே இருக்காது. (இப்போதும் அப்படித்தான்). இணைப்பில் இருக்கும் அக்கடிதத்தின் நகலைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்!
இதைப் படித்துப் புரிந்து எப்படித்தான் பிரசுரம் செய்தார்களோ? கணையாழி குழுவினருக்கே வெளிச்சம்!
அடுத்தடுத்த இதழ்களில் இதுதொடர்பான விவாதங்கள் தொடர்ந்தன. பின்னர் "இறுதி விவாத மேடை" எனும் தலைப்பில் மீண்டும் நான் எழுதிய கடிதம் ஒன்று 10 பக்க அளவில் பிரசுரிக்கப்பட்டது.
அந்த இதழ் என் வசம் இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக