தெற்கு ரயில்வே சார்பில் 9 ரயில்வே பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன
இதில், தமிழ்நாட்டில் 8 பள்ளிகளும், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒன்றுமாகும்.
தற்போது இந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாம்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது ரயில்வே பள்ளிகளை நம்பியுள்ள பெற்றோரையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் நாட்டில் இயங்கிவரும் ரயில்வே பள்ளிகளில், விழுப்புரம் ரயில்வே இருபாலர் பள்ளியும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பள்ளி 1924இல் தொடங்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தை ஒட்டி, பரந்து விரிந்த நிலப்பரப்பில் இயங்கி வருகிறது.
விழுப்புரத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, ரயில்வே இருபாலர் பள்ளி.
இப்போது, இந்த அடையாளத்தை இழக்கிறது விழுப்புரம்.
இது, வரலாற்றுச் சோகம் தான்..!
-விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)
(இணைப்பில்: இன்றைய தினகரன் செய்தி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக