புதன், 2 மே, 2018

கூவாகம் திருவிழா: அரவாணிகளுக்கு மட்டுமானதா?

கூவாகம்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்.
இங்குள்ள கூத்தாண்டவர், உலகம் முழுவதும் அறியப்பட்டவராக இருக்கிறார்.
இவர் குடிகொண்டிருக்கும் கோயிலின் வயது, அதிகப்பட்சமாக, 150 இருக்கலாம்!
1901இல் டபிள்யு பிரான்சிஸ் என்பவரால் வெளியிடப்பட்ட 'தென்னார்க்காடு மாவட்ட விவரங்க் குறிப்பி'ல் இக்கோயில் திருவிழா குறித்த குறிப்பு இருக்கிறது.
கூவாகம் கூத்தாண்டவர், திருவெண்ணெய் நல்லூர் சுற்றுவட்டார மக்களின் குல தெய்வமாவார்.
இப்பகுதியைச் சார்ந்த பலரும் தங்கள் குழந்தைகளுக்கு, கூத்தன், கூத்தாண்டவர் எனப் பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்களின் நேர்த்திக் கடனாக, ஆண்கள் இங்கு, கோயில் பூசாரி கையால் தாலி தரித்துக் கொள்கின்றனர்.
கூத்தாண்டவர் விளைச்சலுக்கான தெய்வமும் ஆவார்.
தேரோட்டத்தின் போது இதற்கான வெளிப்பாட்டினை நாம் பார்க்கலாம்.
கூத்தாண்டவர் கோயில் திருவிழா, நான்கைந்து கிராமங்களைச் சேர்ந்துக் கொண்டாடும் திருவிழா ஆகும்.
அனைத்துச் சாதியினரும் பங்கெடுக்கும் பண்பாட்டுத் திருவிழா.
வட தமிழகத்தில் பாரதம் எந்தளவுக்குத் தாக்கம் பெற்றிருக்கிறது என்பதற்கு, கூவாகம் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு அரவாணிகள் வருகை என்பது, 20 ஆண்டுகளுக்குள்ளாகத்தான்.
திருவிழாவில் அரவாணிகள் மட்டும் பங்கேற்கவில்லை. அரவாணிகளும் பங்கேற்கிறார்கள். இதுதான் உண்மை.
இவ்வளவுப் பின்புலத்தையும் மறைத்துவிட்டு,
கூவாகம் திருவிழா ஏதோ அரவாணிகளுக்கானத் திருவிழாவாக, சிலர்  உருவகப்படுத்த முற்படுவது வேதனைக்கு உரியது..!

விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக