செவ்வாய், 8 மே, 2018

இரயிலை பார்க்க வந்த ஆடுகள்




விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனியில் பார்த்திருக்கிறேன்.
மந்தை மந்தையாக ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.

இன்று காலை, அந்த ஆடுகளுக்குச் சின்ன ஆசை.

எத்தனை நாள் தான் இரயில் நிலையத்துக்கு வெளியேயே சுற்றிக் கொண்டிருப்பது?

ஒரு மாற்றத்துக்காக இரயில் நிலையத்துக்குள் புகுந்து விட்டன.

சாவகாசமாக, தண்டவாளங்களில் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகள்,
இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதும்,
இரயில் எழுப்பும் சத்தத்தைக் கேட்டு பின்னோக்கி ஓடி வருவதும்,
பின்னர் இரயிலை நோக்கிச் செல்வதும்,
அழகான விளையாட்டு தான்!

பின்னர் ரயில்வே நிர்வாகம் நம்மிடமும் ஏதாவது கட்டணம் வசூலித்துவிடுமோ?  எனும் பயத்தோடு என்னவோ,
மீண்டும் குவார்ட்டர்ஸ் பக்கமே நடையைக் கட்டிவிட்டன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக