2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்த நேரம்.
ஆண்டிமடத்தில் இருந்த அவரது தொகுதி அலுவலகத்தில், அவரை முதன் முதலாக சந்தித்தேன். குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக…
எங்கள் உரையாடல் பலமணி நேரம் நீடித்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை, வீரப்பன், தேவாரம் என் பல திசைகளிலும் என் நேர்காணல் பயணித்தது.
அவரோ அதற்கெல்லாம் சளைக்கவில்லை.
மேலும், டாக்டர் ராமதாஸ் மீது பழி சொல்பவனின் தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியதாக தகவல் வெளியான நேரம் அது. இதுபற்றியும் என் கேள்வி இருந்தது.
அவர் சட்டென்று பின் வரும் வகையில் விளக்கமளித்தார்:
‘'நாடோடியாக இருந்த இந்த சமுதாயத்தை ஆளுகின்ற சமுதாயமாகவும் இந்த சமுதாயத்தின் ஆதரவு இல்லாமல் இங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் டாக்டர் அய்யா தான். அவரைப் பற்றி ஒருவன் குறை சொல்கிறான் அவனையும் நாம் தலைவனாக ஏற்றுக் கொள்கிறோம் என்றால் நாம் உண்மையான வன்னியராக இருக்க முடியாது என்று தான் பேசினேனே தவிர யாருடைய தலையையும் எடுப்பேன் என்று பேசவில்லை.’
தன் தலைவர் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். பேட்டியின் இடையில் சொன்னார், ' அய்யாவை நாங்கள் தலைவராக அல்ல தெய்வமாகும் பார்க்கிறோம்.’
இப்படியான ஒரு முரட்டு பக்தரை, காடுவெட்டியாரை இழந்து நிற்கிறது அந்த இயக்கம்..!
- விழுப்புரத்தார் ( கோ.செங்குட்டுவன்)
ஆண்டிமடத்தில் இருந்த அவரது தொகுதி அலுவலகத்தில், அவரை முதன் முதலாக சந்தித்தேன். குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக…
எங்கள் உரையாடல் பலமணி நேரம் நீடித்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை, வீரப்பன், தேவாரம் என் பல திசைகளிலும் என் நேர்காணல் பயணித்தது.
அவரோ அதற்கெல்லாம் சளைக்கவில்லை.
மேலும், டாக்டர் ராமதாஸ் மீது பழி சொல்பவனின் தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியதாக தகவல் வெளியான நேரம் அது. இதுபற்றியும் என் கேள்வி இருந்தது.
அவர் சட்டென்று பின் வரும் வகையில் விளக்கமளித்தார்:
‘'நாடோடியாக இருந்த இந்த சமுதாயத்தை ஆளுகின்ற சமுதாயமாகவும் இந்த சமுதாயத்தின் ஆதரவு இல்லாமல் இங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் டாக்டர் அய்யா தான். அவரைப் பற்றி ஒருவன் குறை சொல்கிறான் அவனையும் நாம் தலைவனாக ஏற்றுக் கொள்கிறோம் என்றால் நாம் உண்மையான வன்னியராக இருக்க முடியாது என்று தான் பேசினேனே தவிர யாருடைய தலையையும் எடுப்பேன் என்று பேசவில்லை.’
தன் தலைவர் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். பேட்டியின் இடையில் சொன்னார், ' அய்யாவை நாங்கள் தலைவராக அல்ல தெய்வமாகும் பார்க்கிறோம்.’
இப்படியான ஒரு முரட்டு பக்தரை, காடுவெட்டியாரை இழந்து நிற்கிறது அந்த இயக்கம்..!
- விழுப்புரத்தார் ( கோ.செங்குட்டுவன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக