புதன், 30 மே, 2018

விழுப்புரம் திருவள்ளுவர் பஸ்நிலையம்

' திருவள்ளுவர் பஸ் நிலையம்'
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் ( இப்போதைய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) வந்த நின்ற இந்த இடம், இப்படித்தான் அழைக்கப்பட்டது!

கீழே பஸ்நிலையம். மேலே ஓட்டுநர், நடத்துநர் ஓய்வறைகள்.
வெளியே, நேரு வீதியில் வாடகைக்கு கடைகள்.

கடைகளை மையப்படுத்திய இந்தக் கட்டடம், 1970 இல் திறக்கப்பட்டதாகும். திறந்து வைத்தவர்: அப்போதைய பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்கள்.

திருவள்ளுவர் பஸ் நிலைய நிழலில் ஒதுங்காத விழுப்புரம் வாசிகள் இருக்க முடியாது!

2000 ஆம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் வந்ததில் இருந்து எல்லாம் மாறியது.

 விழுப்புரம் பழைய  பஸ் நிலையம் குறிப்பாக திருவள்ளுவர் பஸ்நிலையம் தன் அடையாளத்தை இழந்தது!

பாழடைந்த அந்தக் கட்டடத்தின் முன்புறம் கடைகள் மட்டுமே இயங்கி வந்தன.

ஏறக்குறைய 50 ஆண்டுகளை நெருங்கிவிட்ட இந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் எனும் நிலை

அண்மையில் அங்கிருந்த கடைகள் காலி செய்யப்பட்ட நிலையில்,
இப்போது அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறது விழுப்புரம் நகராட்சி..!

- விழுப்புரத்தார் ( கோ.செங்குட்டுவன்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக