திங்கள், 14 மே, 2018

மதம் மக்களின் அபின்

'மதம் மக்களுக்கு அபின்'
கார்ல் மார்க்ஸின் இந்த எழுத்து, ஏதோ குறிப்பிட்ட மதத்துக்கானது என்பது, நம் உள்ளூர்ப் பொதுவுடைமை நண்பர்களின் நம்பிக்கை!

பின்னே பாருங்களேன், சைவ வைணவத்தின் மீது விழுந்துப் புராண்டு புராண்டு எனப் புராண்டுவார்கள். தவறில்லை செய்யட்டும்!

ஆனால் மற்ற மதங்களின் மீது?

 விமர்சனங்களாவது எந்தளவுக்கு வைக்கின்றனர் என்பது கேள்விக்குறியே?

விமர்சனம் வைப்பது ஒரு பக்கமிருந்தாலும், சில நேரங்களில் மற்ற மதங்களை அங்கீகரிக்கவும் செய்யும் போது தான் மார்க்ஸின் எழுத்து நம் நினைவுக்கு வருகிறது.

எனது ' சமணர் கழுவேற்றம்' நூல் தயாராகிக் கொண்டிருந்த நேரம்.

விழுப்புரம் காந்தி சிலை அருகே, இதுபற்றி எனக்கும் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவருக்கும் கடும் வாக்குவாதம்.

அப்போது அந்த நண்பர் சொன்னார், ' சமண பௌத்த மதங்கள் புரட்சிகரமானவை.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் அவரிடம் அமைதியாகக் கேட்டேன், ' மகிழ்ச்சி. அப்படியானால் உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு இவற்றில் சேர்ந்து விடலாமே?'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக