திங்கள், 31 டிசம்பர், 2018
சனி, 29 டிசம்பர், 2018
விழுப்புரத்தில் களைகட்டும் மீன் விற்பனை
மீனகாலை நான்கு மணி. விழுப்புரம் எம்.ஜி.ரோடு. நிற்பதற்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம்!
பரபரக்கிறது மீன் வியாபாரம்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து வாங்கிப் போகிறார்கள்.
வெளியில் வாங்குவதை விட இங்கு வாங்கினால், குறைந்தபட்சம் ஐம்பது அறுபது ரூபாய் கம்மி.
கன்னியாகுமரியில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளாவில் இருந்தும் மீன்கள் விழுப்புரம் கொண்டு வரப்படுகின்றன.
'இங்கிருந்து செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான ஊர்களுக்கு மீன்கள் போவதாக'ச் சொல்லும் நண்பர் குமரன் Kumaran Villupuram Kakuppam,
'மரக்காணம், கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கும் போவதாகவும்' சொல்கிறார்.
வியப்பாகத்தான் இருக்கிறது!
விழுப்புரம் மிகப்பெரிய மீன் சந்தையாகவும் மாறியுள்ளது.
மகிழ்ச்சி!
அதிகாலை மீன் விற்பவர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது!
இவர்களால், கடைத் தெருவைச் சேர்ந்த மற்ற வணிகர்களுக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
விழுப்புரம் மிகப்பெரிய வணிகத் தளம். மீன் விற்பனையிலும்.
இதைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் தான் முயற்சி எடுக்க வேண்டும்..!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
அலையும் அலைப்பேசியும்
விபத்தில் சிக்கியவர்களுக்கு விழுப்புரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் புதுச்சேரிக்குக் கொண்டு செல்வார்கள்.
நேற்று நடந்த ஒருவிபத்தில், புதுச்சேரியில் முதலுதவி கொடுத்து, பிறகு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.
என்ன விபத்து? யாருக்கு விபத்து? வாங்கப் பாக்கலாம்!
“அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிட்டு நாளாச்சுது. அருகிலுள்ள புதுவைக்காவது அழைத்துப் போயேன் பா“ மகன் சித்தார்த்தனின் ஓயாத வேண்டுகோள்.
நேற்று காலை, புதுவைக்கு ரயிலில் பயணம். அங்கிருந்து கடற்கரைக்கு ஜாலியாக ஒருநடை. தொடக்கத்திலேயே நின்றிருந்த, கவர்னர் டுயூப்ளேவை தரிசித்துவிட்டு, கடற்கரையில் காலடி எடுத்து வைத்தோம்.
பிறகு, கிழக்கில் நடைபோட்டோம். அதோ, அந்தப் பழைய பாலத்தின் அருகில் கடல் அலை கரையைத் தொட்டுச் சொல்கிறது. சரி, அங்கேயே போவோம்.
காலை நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இல்லை. மீனவர்கள் படகுகளையும் வலைகளையும் சரி செய்து கொண்டிருந்தார்கள். சுனாமி நினைவு மணற் சிற்பம் எங்களை வேதனையுடன் பார்த்தது.
துருப்பிடித்து, உருக்குலைந்து நின்றிருந்த அந்தப் பாலம் தனது முந்தைய வரலாற்றுக்கு ஏங்குவதுபோல் தெரிந்தது.
சித்தார்த்தனுக்குக் கொண்டாட்டம். ஆசைத் தீரக்குளித்தான். எனக்கும் மகிழ்ச்சியே.
ஒருமணி நேரத்தையும் கடந்தது. சரி புறப்படலாம் என்றபோதுதான் அந்தப் பேரலை, என் உயரத்துக்கானது வந்தது.
அருகில் நின்றிருந்தப் பாறைகளைப் பிடித்துத் தப்பித்தோம். அப்படியும் பாறைகளில் உரசியதில் சித்தார்த்தனின் கால்களில் பயங்கர சிராய்ப்பு. இரத்தம். பொறுத்துக் கொண்டான்.
எப்படியோ அங்கிருந்து மீண்டு வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்!
கரைக்கு வந்தவுடன் அலைப்பேசியை எடுத்தால் சுவிட்ச் ஆப். எங்களுடன் சேர்ந்து அதுவும் நனைந்திருந்தது. மனசுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.
எப்படியோ, காந்தி வீதி, நேருவீதி என்று அங்குமிங்கும் சுற்றி, அண்ணா சாலையை அடைந்தோம்.
ஒரு செல்போன் சரி பார்க்கும் கடைக்குள் கொண்டு சென்றவுடன், போனை கழட்டிப் பார்த்த ஊழியர் சொன்னார், “இன்னும் சிலமணி நேரம் தாமதித்து இருந்தால் அவ்வளவுதான் போர்டு போயிருக்கும்.“
எப்படியோ சரியான நேரத்துக் கொண்டு வந்துவிட்டோம். ஒரு மணி நேரம் பழுதுப் பார்க்கும் பணி. பிறகு சரி செய்துக் கொடுத்தார்கள். மனசுக்குள் ஒரு நிம்மதி.
ஊருக்குத் திரும்புவதற்கு மட்டும் காசு எடுத்துக் கொண்டு மீதிப்பணம் கட்டணமாகியது.
மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்து, ரயிலில் உட்காந்தவுடன் வீட்டுக்குப் பேசலாமே, போனை எடுத்தால், டிஸ்பிளே கலர் கலராகத் தெரிகிறது. அவ்வளவுதான் மனசுக்குள் மீண்டும் பதட்டம்.
விழுப்புரம் வந்து சேர்ந்தவுடன் நண்பர் அகிலனைச் சந்தித்தேன். அவரது செல்போன் கடையில் மீண்டும் சிகிச்சை நடந்தது. இறுதியில் டிஸ்பிளே போய்விட்டது என்று தகவல் வந்தது. நம் அளவுக்கு மீறிய தொகையுடன் டிஸ்பிளே மாற்றப்பட்டது.
ஏறக்குறைய காலை 10 மணிக்குத் தொடங்கிய பதட்டம், இரவு 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. புதுச்சேரியிலும் விழுப்புரத்திலும் எங்களிடம் சொன்னது, “கடல் தண்ணீரில் சிக்கி மீண்டது உங்க போனாகத்தான் இருக்கும்!”.
ஆமாம். ஆன்ட்ராய்டு போனுக்கு கடல் அலை, உப்புத் தண்ணீர் கடுமையான எதிரி. பலருக்கும் இது தெரிந்தும் இருக்கலாம்.
எனக்குத் தெரியாது. என் அனுபவத்தில் உணர்ந்துக் கொண்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே...
நேற்று நடந்த ஒருவிபத்தில், புதுச்சேரியில் முதலுதவி கொடுத்து, பிறகு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.
என்ன விபத்து? யாருக்கு விபத்து? வாங்கப் பாக்கலாம்!
“அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிட்டு நாளாச்சுது. அருகிலுள்ள புதுவைக்காவது அழைத்துப் போயேன் பா“ மகன் சித்தார்த்தனின் ஓயாத வேண்டுகோள்.
நேற்று காலை, புதுவைக்கு ரயிலில் பயணம். அங்கிருந்து கடற்கரைக்கு ஜாலியாக ஒருநடை. தொடக்கத்திலேயே நின்றிருந்த, கவர்னர் டுயூப்ளேவை தரிசித்துவிட்டு, கடற்கரையில் காலடி எடுத்து வைத்தோம்.
பிறகு, கிழக்கில் நடைபோட்டோம். அதோ, அந்தப் பழைய பாலத்தின் அருகில் கடல் அலை கரையைத் தொட்டுச் சொல்கிறது. சரி, அங்கேயே போவோம்.
காலை நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இல்லை. மீனவர்கள் படகுகளையும் வலைகளையும் சரி செய்து கொண்டிருந்தார்கள். சுனாமி நினைவு மணற் சிற்பம் எங்களை வேதனையுடன் பார்த்தது.
துருப்பிடித்து, உருக்குலைந்து நின்றிருந்த அந்தப் பாலம் தனது முந்தைய வரலாற்றுக்கு ஏங்குவதுபோல் தெரிந்தது.
ஒருமணி நேரத்தையும் கடந்தது. சரி புறப்படலாம் என்றபோதுதான் அந்தப் பேரலை, என் உயரத்துக்கானது வந்தது.
அருகில் நின்றிருந்தப் பாறைகளைப் பிடித்துத் தப்பித்தோம். அப்படியும் பாறைகளில் உரசியதில் சித்தார்த்தனின் கால்களில் பயங்கர சிராய்ப்பு. இரத்தம். பொறுத்துக் கொண்டான்.
எப்படியோ அங்கிருந்து மீண்டு வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்!
கரைக்கு வந்தவுடன் அலைப்பேசியை எடுத்தால் சுவிட்ச் ஆப். எங்களுடன் சேர்ந்து அதுவும் நனைந்திருந்தது. மனசுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.
எப்படியோ, காந்தி வீதி, நேருவீதி என்று அங்குமிங்கும் சுற்றி, அண்ணா சாலையை அடைந்தோம்.
ஒரு செல்போன் சரி பார்க்கும் கடைக்குள் கொண்டு சென்றவுடன், போனை கழட்டிப் பார்த்த ஊழியர் சொன்னார், “இன்னும் சிலமணி நேரம் தாமதித்து இருந்தால் அவ்வளவுதான் போர்டு போயிருக்கும்.“
எப்படியோ சரியான நேரத்துக் கொண்டு வந்துவிட்டோம். ஒரு மணி நேரம் பழுதுப் பார்க்கும் பணி. பிறகு சரி செய்துக் கொடுத்தார்கள். மனசுக்குள் ஒரு நிம்மதி.
ஊருக்குத் திரும்புவதற்கு மட்டும் காசு எடுத்துக் கொண்டு மீதிப்பணம் கட்டணமாகியது.
மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்து, ரயிலில் உட்காந்தவுடன் வீட்டுக்குப் பேசலாமே, போனை எடுத்தால், டிஸ்பிளே கலர் கலராகத் தெரிகிறது. அவ்வளவுதான் மனசுக்குள் மீண்டும் பதட்டம்.
விழுப்புரம் வந்து சேர்ந்தவுடன் நண்பர் அகிலனைச் சந்தித்தேன். அவரது செல்போன் கடையில் மீண்டும் சிகிச்சை நடந்தது. இறுதியில் டிஸ்பிளே போய்விட்டது என்று தகவல் வந்தது. நம் அளவுக்கு மீறிய தொகையுடன் டிஸ்பிளே மாற்றப்பட்டது.
ஏறக்குறைய காலை 10 மணிக்குத் தொடங்கிய பதட்டம், இரவு 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. புதுச்சேரியிலும் விழுப்புரத்திலும் எங்களிடம் சொன்னது, “கடல் தண்ணீரில் சிக்கி மீண்டது உங்க போனாகத்தான் இருக்கும்!”.
ஆமாம். ஆன்ட்ராய்டு போனுக்கு கடல் அலை, உப்புத் தண்ணீர் கடுமையான எதிரி. பலருக்கும் இது தெரிந்தும் இருக்கலாம்.
எனக்குத் தெரியாது. என் அனுபவத்தில் உணர்ந்துக் கொண்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே...
திங்கள், 24 டிசம்பர், 2018
சுனாமி: 14ஆம் ஆண்டு நினைவு தினம்...
சுனாமி எனும் ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகிறது.
அதன் வலியும் வடுக்களும் விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராமங்களில் இன்றும் காண்கிறோம்.
ஆழிப்பேரலைக் கோரத்தாண்டவம் ஆடிய சில மணி நேரங்களில் நாம் அங்கிருந்தோம்.
கூனிமேடுக் குப்பம் இங்குதான் அதிக பாதிப்பு என்றார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கடல் தண்ணீர். ஏறக்குறைய 300 முதல் 500 மீட்டர் வரை தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியிருக்கிறது கடல்!
கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் படகுகள் எல்லாம் ஊருக்குள் வந்து விட்டன.
“தென்னை மரம் உயரத்துக்கு அலை வந்தது” பெரியவர் ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது.
ஏராளமான வீடுகள் காணாமல் போயிருந்தன
மக்கள் ... கூனிமேடுக்குப்பத்தில் மட்டும் 22 பேர் பலியாகி இருந்தனர். இதேபோல் தந்திராயன் குப்பத்திலும் 22 பேர். முதலியார் குப்பத்தில் 18 பேர். அனிச்சங் குப்பத்தில் 5 பேர்.
இப்படியாக விழுப்புரம் மாவட்டக் கடலோரக் குப்பங்களில் 74 பேரை சுனாமி பலி கொண்டதாகச் சொல்கிறது, புள்ளி விவரம் ஒன்று.
எங்கெங்கும் சடலங்கள்... மரண ஓலங்கள்... இடிந்துப் போய் உட்கார்ந்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன்.
பல இடங்களில் அதிகாரிகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கடும் எதிர்ப்பு.
இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை, கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.
வழக்கமாக திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தனவே தவிர, எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதன் கோப ஆவேசத்தை நாங்கள் நேரில் உணர முடிந்தது. சுற்றிவளைப்பு, சிறைபிடிப்பு, ஓட்டமெடுப்பு என்றெல்லாம் அடுத்தநாள் செய்திகளில் கலந்திருந்தன.
13 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். வலிகள் மறைந்திருக்கலாம். வடுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராம மக்களின், மீனவர்களின் கோரிக்கையும் அப்படியே தான் இருக்கின்றன...
அதன் வலியும் வடுக்களும் விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராமங்களில் இன்றும் காண்கிறோம்.
ஆழிப்பேரலைக் கோரத்தாண்டவம் ஆடிய சில மணி நேரங்களில் நாம் அங்கிருந்தோம்.
கூனிமேடுக் குப்பம் இங்குதான் அதிக பாதிப்பு என்றார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கடல் தண்ணீர். ஏறக்குறைய 300 முதல் 500 மீட்டர் வரை தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியிருக்கிறது கடல்!
கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் படகுகள் எல்லாம் ஊருக்குள் வந்து விட்டன.
“தென்னை மரம் உயரத்துக்கு அலை வந்தது” பெரியவர் ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது.
ஏராளமான வீடுகள் காணாமல் போயிருந்தன
மக்கள் ... கூனிமேடுக்குப்பத்தில் மட்டும் 22 பேர் பலியாகி இருந்தனர். இதேபோல் தந்திராயன் குப்பத்திலும் 22 பேர். முதலியார் குப்பத்தில் 18 பேர். அனிச்சங் குப்பத்தில் 5 பேர்.
இப்படியாக விழுப்புரம் மாவட்டக் கடலோரக் குப்பங்களில் 74 பேரை சுனாமி பலி கொண்டதாகச் சொல்கிறது, புள்ளி விவரம் ஒன்று.
எங்கெங்கும் சடலங்கள்... மரண ஓலங்கள்... இடிந்துப் போய் உட்கார்ந்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன்.
பல இடங்களில் அதிகாரிகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கடும் எதிர்ப்பு.
இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை, கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.
வழக்கமாக திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தனவே தவிர, எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதன் கோப ஆவேசத்தை நாங்கள் நேரில் உணர முடிந்தது. சுற்றிவளைப்பு, சிறைபிடிப்பு, ஓட்டமெடுப்பு என்றெல்லாம் அடுத்தநாள் செய்திகளில் கலந்திருந்தன.
13 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். வலிகள் மறைந்திருக்கலாம். வடுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராம மக்களின், மீனவர்களின் கோரிக்கையும் அப்படியே தான் இருக்கின்றன...
வெள்ளி, 21 டிசம்பர், 2018
ஞாயிறு, 16 டிசம்பர், 2018
விழுப்புரத்தில் மாரத்தான்
மிகச் சிறப்பாகவே நடந்தது, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை, விழுப்புரத்தில் இன்று (16.12.2018) நடத்திய, மாரத்தான்.
அதிகாலை 6 மணிக்கெல்லாம் பெருந்திட்ட வளாக மைதானம் நிரம்பி வழிந்தது.
சிறுவர் முதல் பெரியவர் வரை, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி இயக்குனர் திரு. அவர்கள் மிகவும் நேர்த்தியாக மாரத்தான் வீரர்களை ஒருங்கிணைத்தார்.
அடடா… வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் மாரத்தான் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
உடன், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் நம் தோழர்களும்.
ஓட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
அருங்காட்சியகம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். நன்றிங்க ஐயா…
விழுப்புரத்தின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகியுள்ளது இன்றைய மாரத்தான்.
மகிழ்ச்சி தான்.
இதற்காக கடுமையான உழைப்பினைச் செலுத்திய, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை தலைவர் அ.அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்களை நாம் வாழ்த்துவோம்…
புகைப்படம்: கிருஷ்ணா
அதிகாலை 6 மணிக்கெல்லாம் பெருந்திட்ட வளாக மைதானம் நிரம்பி வழிந்தது.
சிறுவர் முதல் பெரியவர் வரை, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி இயக்குனர் திரு. அவர்கள் மிகவும் நேர்த்தியாக மாரத்தான் வீரர்களை ஒருங்கிணைத்தார்.
அடடா… வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் மாரத்தான் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.
உடன், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் நம் தோழர்களும்.
ஓட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
அருங்காட்சியகம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். நன்றிங்க ஐயா…
விழுப்புரத்தின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகியுள்ளது இன்றைய மாரத்தான்.
மகிழ்ச்சி தான்.
இதற்காக கடுமையான உழைப்பினைச் செலுத்திய, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை தலைவர் அ.அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்களை நாம் வாழ்த்துவோம்…
புகைப்படம்: கிருஷ்ணா
சனி, 8 டிசம்பர், 2018
செ.கொத்தமங்கலம்: மக்களை நோக்கி வரலாறு...
“இதையெல்லாம் பல வருசத்துக்கு முன்பே கண்டுபிடித்து விட்டோம். ஆவணப்படுத்தி விட்டோம்” என்பார்கள்.
உண்மை தான். மறுக்க இயலாது. வரலாறு ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கும்!
ஆனால், ஊர் மக்களுக்கு?
அவங்க ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து அவர்களுக்கே தெரியாது!
விழுப்புரத்தை அடுத்த செ.கொத்தமங்கலம் கள ஆய்வின்போது இந்த நிலவரத்தை மாற்ற நாம் முனைந்தோம்.
கூடுமானவரை அப்பகுதி இளைஞர்களை நம்முடன் அழைத்துச் சென்றோம்.
இது மூத்த தேவி, இது சதிக்கல் என்றெல்லாம் அவர்களுக்கு விளக்கினோம். இவை, அந்தக் கிராமத்தின் பெயரில் blog ஏற்படுத்தி இருந்த, விஜயராமன் போன்றவர்களுக்கு புதிய தகவலாகவே இருந்தது. அறிந்து மகிழ்ந்தார்கள்.
அடுத்தக் கட்டமாக, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். தலைமை ஆசிரியர் திரு.எம்.தண்டபாணி அவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாகவே இருந்தனர்.
சில நிமிட இடைவெளியில், மாணவ மாணவியரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்கள் மத்தியில் பேசிய நாம், செ.கொத்தமங்கலம் கிராமத்தின் தொன்மை குறித்தும் அப்பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும் விரிவாகவே பேசினோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்து மாணவ மாணவியர் அக மகிழ்ந்தார்கள்.
நாம் பேசி முடித்தவுடன் வெளியே ஓடிவந்த மாணவர்கள் சிலர், அங்கிருந்த வரலாற்றுச் சின்னங்களை ஆர்வத்துடன் சுற்றி வந்துப் பார்த்தனர்.
நமக்கும் மகிழ்ச்சி!
இப்போது பத்திரிகைகளிலும் கூட செ.கொத்தமங்கலத்தின் தொன்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஊடகங்களிலும் செய்திகள்...
வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது என்பார்களே, அது இதுதான்.
எத்தனைத் தடைக்கற்கள் வந்தாலும், மக்களிடம் வரலாற்றைக் கொண்டு செல்லும் நம் பணி, மக்கள் ஒத்துழைப்புடன் தொடரும்…
ஏனெனில் வரலாறு, மக்களுக்குச் சொந்தமானது.
புகைப்படங்கள்: கிருஷ்ணா...
உண்மை தான். மறுக்க இயலாது. வரலாறு ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கும்!
ஆனால், ஊர் மக்களுக்கு?
அவங்க ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து அவர்களுக்கே தெரியாது!
விழுப்புரத்தை அடுத்த செ.கொத்தமங்கலம் கள ஆய்வின்போது இந்த நிலவரத்தை மாற்ற நாம் முனைந்தோம்.
கூடுமானவரை அப்பகுதி இளைஞர்களை நம்முடன் அழைத்துச் சென்றோம்.
இது மூத்த தேவி, இது சதிக்கல் என்றெல்லாம் அவர்களுக்கு விளக்கினோம். இவை, அந்தக் கிராமத்தின் பெயரில் blog ஏற்படுத்தி இருந்த, விஜயராமன் போன்றவர்களுக்கு புதிய தகவலாகவே இருந்தது. அறிந்து மகிழ்ந்தார்கள்.
அடுத்தக் கட்டமாக, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். தலைமை ஆசிரியர் திரு.எம்.தண்டபாணி அவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாகவே இருந்தனர்.
சில நிமிட இடைவெளியில், மாணவ மாணவியரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்கள் மத்தியில் பேசிய நாம், செ.கொத்தமங்கலம் கிராமத்தின் தொன்மை குறித்தும் அப்பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும் விரிவாகவே பேசினோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்து மாணவ மாணவியர் அக மகிழ்ந்தார்கள்.
நாம் பேசி முடித்தவுடன் வெளியே ஓடிவந்த மாணவர்கள் சிலர், அங்கிருந்த வரலாற்றுச் சின்னங்களை ஆர்வத்துடன் சுற்றி வந்துப் பார்த்தனர்.
நமக்கும் மகிழ்ச்சி!
இப்போது பத்திரிகைகளிலும் கூட செ.கொத்தமங்கலத்தின் தொன்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஊடகங்களிலும் செய்திகள்...
வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது என்பார்களே, அது இதுதான்.
எத்தனைத் தடைக்கற்கள் வந்தாலும், மக்களிடம் வரலாற்றைக் கொண்டு செல்லும் நம் பணி, மக்கள் ஒத்துழைப்புடன் தொடரும்…
ஏனெனில் வரலாறு, மக்களுக்குச் சொந்தமானது.
புகைப்படங்கள்: கிருஷ்ணா...
புதன், 5 டிசம்பர், 2018
விழுப்புரம் மாவட்ட ஊர்கள் - ஆங்கிலத்தில்
ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருக்கிறோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “ஊர்களின் பெயர்கள் போகிறப் போக்கில் வைக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.” எனும் வேதனையை வெளிப்படுத்திய நான்,
இதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ், அண்ணாமலை படத்தில், நேசமணி பொன்னையா என்பதை நாசமாய் நீ போனீயா என்று படிப்பாரே, அதைச் சுட்டிக் காட்டினேன்.
இதனால், கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.
இந்த நகைச்சுவையில் பொதிந்து கிடக்கும் வருத்தத்தினை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டார்.
ஊர்ப் பெயர்களுக்குப் பின்னால் உள்ள வரலாறு முக்கியம் என்பதை உணர்த்திய மாவட்ட ஆட்சியர், ஆங்கிலத்தில் பெயர் மாற்றும் போது வரலாற்றையும் கவனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் குழுவினருடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலரும் கலந்துப் பேசினர்.
சம்பிரதாயத்துக்கு என்று இல்லாமல், உள்ளபடியே சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது.
மகிழ்ச்சி... அடுத்தடுத்தக் கூட்டங்கள் இருக்கின்றன.
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருக்கிறோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “ஊர்களின் பெயர்கள் போகிறப் போக்கில் வைக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.” எனும் வேதனையை வெளிப்படுத்திய நான்,
இதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ், அண்ணாமலை படத்தில், நேசமணி பொன்னையா என்பதை நாசமாய் நீ போனீயா என்று படிப்பாரே, அதைச் சுட்டிக் காட்டினேன்.
இதனால், கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.
இந்த நகைச்சுவையில் பொதிந்து கிடக்கும் வருத்தத்தினை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டார்.
ஊர்ப் பெயர்களுக்குப் பின்னால் உள்ள வரலாறு முக்கியம் என்பதை உணர்த்திய மாவட்ட ஆட்சியர், ஆங்கிலத்தில் பெயர் மாற்றும் போது வரலாற்றையும் கவனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் குழுவினருடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலரும் கலந்துப் பேசினர்.
சம்பிரதாயத்துக்கு என்று இல்லாமல், உள்ளபடியே சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது.
மகிழ்ச்சி... அடுத்தடுத்தக் கூட்டங்கள் இருக்கின்றன.
ஞாயிறு, 11 நவம்பர், 2018
இலிங்கமணைத்த நந்தி
அழகே உருவான நந்தி. கால்களை மடக்கி அமர்ந்துள்ளது.
இதன் முன்னங்கால்களுக்கு இடையில், செதுக்கப்பட்டுள்ளது, சிறிய அளவிலான இலிங்கம்.
இந்த இலிங்கம், நந்திக்குத் தனித்தன்மை தருவதுடன் இதன் பெருமையையும் பன்மடங்காக உயர்த்தி விடுகிறது.
“இதுபோல் இலிங்கமணைத்த சோழர்கால நந்தியை இதுநாள் வரையிலும் யாண்டும் கண்டதில்லை” என வியக்கின்றனர், ஆய்வாளர்கள் மு.நளினி, இரா.கலைக்கோவன். (நூல் மகேந்திரர் குடைவரைகள்).
இது, அமைந்துள்ள இடம் செஞ்சி அருகே உள்ள மேலச்சேரிக் குடைவரையின், வெளிப்புறம்.
இந்த இலிங்கமணைத்த நந்தியை நானும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
வாய்ப்பிருப்பவர்கள், பல்லவர்களின் மேலச்சேரி குடைவரைக் கோயிலையும், சோழர் கால நந்தியையும் கண்டு வருக...
இதன் முன்னங்கால்களுக்கு இடையில், செதுக்கப்பட்டுள்ளது, சிறிய அளவிலான இலிங்கம்.
இந்த இலிங்கம், நந்திக்குத் தனித்தன்மை தருவதுடன் இதன் பெருமையையும் பன்மடங்காக உயர்த்தி விடுகிறது.
“இதுபோல் இலிங்கமணைத்த சோழர்கால நந்தியை இதுநாள் வரையிலும் யாண்டும் கண்டதில்லை” என வியக்கின்றனர், ஆய்வாளர்கள் மு.நளினி, இரா.கலைக்கோவன். (நூல் மகேந்திரர் குடைவரைகள்).
இது, அமைந்துள்ள இடம் செஞ்சி அருகே உள்ள மேலச்சேரிக் குடைவரையின், வெளிப்புறம்.
இந்த இலிங்கமணைத்த நந்தியை நானும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
வாய்ப்பிருப்பவர்கள், பல்லவர்களின் மேலச்சேரி குடைவரைக் கோயிலையும், சோழர் கால நந்தியையும் கண்டு வருக...
வியாழன், 18 அக்டோபர், 2018
புதுச்சேரியில் வசதியாகத்தான் வாழ்ந்தார் பாரதி...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு, இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் புதுச்சேரியில் நடந்தது. அப்போது மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
'நம்மிடையே பாரதி வரலாறு தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்டனவாக உள்ள இரண்டு தகவல்கள் கட்டுக்கதைகளே என அடையாளம் காட்ட முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கம்' எனத் தொடக்கத்திலேயே தெளிவாக அறிவித்து விடுகிறார் கட்டுரையாளர்.
பாரதியின் புதுச்சேரி வருகை மற்றும் புதுச்சேரி வாழ்க்கை குறித்த கீழ்க்காணும் தகவல்களைத் தருகின்றது இக்கட்டுரை:
கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி பாரதியார் அடைக்கலம் தேடி புதுச்சேரி வரவில்லை. இந்தியா பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தீட்டப்பட்ட ஒரு நீண்ட கால செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் பாரதியின் புதுச்சேரி வருகை.
வியப்பும் பெருமிதமும் கொண்டு நாம் போற்றி எழுத வேண்டிய உன்னதமான வாழ்க்கையைத் தான் பாரதி புதுச்சேரியில் வாழ்ந்திருக்கிறார்.
புதுச்சேரியில் இருந்த செல்வச் சீமான்களைப் போலத்தான் அவரும் பெரியதொரு வீட்டில் வாழ்ந்திருக்கிறார்.
புதுச்சேரியில் அவர் எழுதி குவித்தவைகள் ஏராளம். தென் ஆப்ரிக்காவில் கூட 1917இல் அவரது நூல் ஒன்று வெளிவந்தது. டர்பனில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் அவருக்கு வந்து சேர்ந்ததாகவும் தகவல் உண்டு.
ஏராளமான உதவிகள் பல திசைகளில் இருந்தும் அவருக்கு வரத்தான் செய்தன.
உலகம் அவரை ஏற்றுப் போற்றிக் கொண்டாடவே செய்தது. அதனால் தான் 'எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று அவர் பாடி மகிழ்ந்தார்.
என்றெல்லாம் விவரிக்கும் இக்கட்டுரையில், 'பாரதி' திரைப்படக் குழுவினரின் ஒப்பாரி குறித்தும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதியில், ‘பாரதியார் பட்ட துயரங்களை மட்டுமே முன்னிறுத்திப் பட்டியல் போடுவதை இனி அனைவரும் விட்டுவிட வேண்டும்' எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், மேற்காணும் கட்டுரை, பாரதியின் புதுச்சேரி வாழ்க்கைக் குறித்த பிம்பங்களைத் தகர்ப்பதாகத்தான் இருக்கிறது!
சனி, 22 செப்டம்பர், 2018
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
1991இல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஜெயலலிதா எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் தொடங்கியது!
முன்பெல்லாம், காவல் நிலையங்களில் மகளிர் போலீசாருக்கென ஒரு பிரிவு (விங்) இருந்தது.
இப்போது, இவர்களுக்கு முழுநேரக் காவல் நிலையம்.
விழுப்புரத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இங்கு அங்கு என்று இடம் தேடி அலைந்தனர்.
இறுதியில், தாலுகா காவல் நிலைய வளாகத்திலேயே இடம் தேர்வானது.
அது, தாலுகா இன்ஸ்பெக்டர் குடியிருப்பாக இருந்தக் கட்டடம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் (ஜீவேந்திரன்) குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழாவுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வருவதாகச் சொல்லி, ஹெலிபேடுக்கான இடம் தேடி அலைந்தனர்.
ஆனால், முதல்வர் வரவில்லை.
அன்றைய டிஜிபி எஸ். ஸ்ரீபால்,
08.09.1994 அன்று மாலை 'விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்'தினைத் திறந்து வைத்தார்.
இப்போது, அதே வளாகத்தில் இக்காலத்தில் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது விட்டது.
இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் அலுவலகம் என பல்வேறு அவதாரம் எடுத்த அந்தக் கட்டடம் காலப்போக்கில் மறைந்துவிட்டது.
இப்போது அந்த இடத்தில் தான், தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டடம் நின்று கொண்டு இருக்கிறது!
முன்பெல்லாம், காவல் நிலையங்களில் மகளிர் போலீசாருக்கென ஒரு பிரிவு (விங்) இருந்தது.
இப்போது, இவர்களுக்கு முழுநேரக் காவல் நிலையம்.
விழுப்புரத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இங்கு அங்கு என்று இடம் தேடி அலைந்தனர்.
இறுதியில், தாலுகா காவல் நிலைய வளாகத்திலேயே இடம் தேர்வானது.
அது, தாலுகா இன்ஸ்பெக்டர் குடியிருப்பாக இருந்தக் கட்டடம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் (ஜீவேந்திரன்) குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழாவுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வருவதாகச் சொல்லி, ஹெலிபேடுக்கான இடம் தேடி அலைந்தனர்.
ஆனால், முதல்வர் வரவில்லை.
அன்றைய டிஜிபி எஸ். ஸ்ரீபால்,
08.09.1994 அன்று மாலை 'விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்'தினைத் திறந்து வைத்தார்.
இப்போது, அதே வளாகத்தில் இக்காலத்தில் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது விட்டது.
இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் அலுவலகம் என பல்வேறு அவதாரம் எடுத்த அந்தக் கட்டடம் காலப்போக்கில் மறைந்துவிட்டது.
இப்போது அந்த இடத்தில் தான், தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டடம் நின்று கொண்டு இருக்கிறது!
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
திருநீர்மலை - கல்வெட்டுகள் மீது நாமம்...
நாமம் எனப்படும் திருமண்.
வைணவச் சடங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது.
உடலில் எங்கெங்குத் திருமண் காப்பு இடலாம் (ஏறக்குறைய 12 இடங்களில்) என்றெல்லாம் வரையறுக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஆனால், திருக்கோயில்களில் எந்தெந்த இடங்களில் திருமண் வரையலாம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை போலும்.
இதோ பாருங்கள்…
நீர் வண்ணப் பெருமாள் திருக்கோயில்.
சென்னை, பல்லாவரம் அருகே திருநீர்மலையில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள இக்கோயில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.
கோயில் வளாகத்திற்குள் நாம் சுற்றி வரும்போது நம் கண்களில் படும் முக்கிய காட்சி, ஆங்காங்கே, பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் பளீரென்று பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள திருமண் – நாமங்கள்!
வைணவத்தின் அடையாளங்களுள் முக்கியமானது, வைணவத் திருக்கோயிலில் இருக்க வேண்டியதுதான். தவறில்லை.
ஆனால், பல இடங்களில், கல்வெட்டுகளின் மீது வரையப்பட்டுள்ளது தான் வேதனை!
இக்கல்வெட்டுகள் வரலாற்றை நினைவுகூரும் ஆவணங்கள்.
அதில் போய்,
பட்டை பட்டையாய் வண்ணந் தீட்டுவது, எழுதுவது …
இதெல்லாம் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை..?
வைணவச் சடங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது.
உடலில் எங்கெங்குத் திருமண் காப்பு இடலாம் (ஏறக்குறைய 12 இடங்களில்) என்றெல்லாம் வரையறுக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஆனால், திருக்கோயில்களில் எந்தெந்த இடங்களில் திருமண் வரையலாம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை போலும்.
இதோ பாருங்கள்…
நீர் வண்ணப் பெருமாள் திருக்கோயில்.
சென்னை, பல்லாவரம் அருகே திருநீர்மலையில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள இக்கோயில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.
கோயில் வளாகத்திற்குள் நாம் சுற்றி வரும்போது நம் கண்களில் படும் முக்கிய காட்சி, ஆங்காங்கே, பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் பளீரென்று பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள திருமண் – நாமங்கள்!
வைணவத்தின் அடையாளங்களுள் முக்கியமானது, வைணவத் திருக்கோயிலில் இருக்க வேண்டியதுதான். தவறில்லை.
ஆனால், பல இடங்களில், கல்வெட்டுகளின் மீது வரையப்பட்டுள்ளது தான் வேதனை!
இக்கல்வெட்டுகள் வரலாற்றை நினைவுகூரும் ஆவணங்கள்.
அதில் போய்,
பட்டை பட்டையாய் வண்ணந் தீட்டுவது, எழுதுவது …
இதெல்லாம் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை..?
திங்கள், 10 செப்டம்பர், 2018
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
கல்வெட்டுகளை மீட்க ஒரு முயற்சி...
உண்மையில் இதை, இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும்…
அவர்கள்தானே வெள்ளை அடிப்பது, கல்வெட்டுகளை மறைப்பது போன்ற திருப்பணிகளை(!) செய்து வருகிறார்கள்.
அல்லது எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்து வரும் தொல்லியல் துறை செய்ய வேண்டும்.
ஆனால், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்கள் செய்கிறார்கள்.
விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது அபிராமேசுவரர் திருக்கோயில். சோழர் காலத்தியது. தேவார மூவரால் பாடப்பெற்றது.
இக்கோயிலில் வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் ஏராளம். ஏராளம். இவை அனைத்தும் திருப்பணி எனும் பெயரில், வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என எழுதப்பட்டு, மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீட்கும் முயற்சியில், விழுப்புரத்தைச் சேர்ந்த நண்பர் அகிலன் தலைமையிலான 'கரிகால சோழன் பசுமை மீட்புப் படை'யினர் மற்றும் நண்பர் நாராயணன் தலைமையிலான ‘யாதும்ஊரே யாவரும் கேளிர்' அமைப்பினர் இன்று காலை இறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு கல்வெட்டு ஆய்வாளர் நண்பர் இரமேஷ் ஊக்க சக்தியாக இருக்கிறார்.
இடையில் நாமும் 'பிரஷ்' பிடித்ததில் மனநிறைவு!
திருக்கோயிலில் நல்ல திருப்பணி. நண்பர்களை வாழ்த்துவோம்..!
அவர்கள்தானே வெள்ளை அடிப்பது, கல்வெட்டுகளை மறைப்பது போன்ற திருப்பணிகளை(!) செய்து வருகிறார்கள்.
அல்லது எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்து வரும் தொல்லியல் துறை செய்ய வேண்டும்.
ஆனால், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்கள் செய்கிறார்கள்.
விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது அபிராமேசுவரர் திருக்கோயில். சோழர் காலத்தியது. தேவார மூவரால் பாடப்பெற்றது.
இக்கோயிலில் வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் ஏராளம். ஏராளம். இவை அனைத்தும் திருப்பணி எனும் பெயரில், வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என எழுதப்பட்டு, மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீட்கும் முயற்சியில், விழுப்புரத்தைச் சேர்ந்த நண்பர் அகிலன் தலைமையிலான 'கரிகால சோழன் பசுமை மீட்புப் படை'யினர் மற்றும் நண்பர் நாராயணன் தலைமையிலான ‘யாதும்ஊரே யாவரும் கேளிர்' அமைப்பினர் இன்று காலை இறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு கல்வெட்டு ஆய்வாளர் நண்பர் இரமேஷ் ஊக்க சக்தியாக இருக்கிறார்.
இடையில் நாமும் 'பிரஷ்' பிடித்ததில் மனநிறைவு!
திருக்கோயிலில் நல்ல திருப்பணி. நண்பர்களை வாழ்த்துவோம்..!
வியாழன், 6 செப்டம்பர், 2018
விழுப்புரம் ஐயனார் குளம்
இணைப்பில் நீங்கள் பார்ப்பது…
நீராழி மண்டபம்
விசுவரூப ஆஞ்சநேயர்
திருமேனி பாதுகாப்பு மையம்
என எந்த ஆக்கிரமிப்பினாலும் பாதிக்கப்படாத,
இயல்பான, விழுப்புரம் ஐயனார் குளம்.
1990களின் தொடக்கத்தில் நான் எடுத்தப் புகைப்படம்.
விழுப்புரம் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் அழகான நீர்ப்பிடிப்பு பகுதி.
ஐயனார் குளமாக? ஆஞ்சநேயர் குளமா? மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமல்ல அரசாங்கத்தின் ஆவணங்களும் சொல்கின்றன: இது ஐயனார் குளம் என்று.
இதனை ஆக்கிரமிக்கவும் மீட்கவுமான எத்தனை முயற்சிகள் காலந்தோறும் நடந்து வந்திருக்கின்றன?
நீண்ட வரலாறு கொண்டது விழுப்புரம் ஐயனார் குளம்.
'இது அரசுக்குச் சொந்தமான இடம் தான்'. பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2000ஆம் தொடக்கத்தில், 'இது நகராட்சிக்கு சொந்தமான இடம். ஆக்கிரமிப்போர் தண்டிக்கப்படுவார்கள்' என குளத்தைச் சுற்றிலும் பேனர்கள் வைக்கப்பட்டதை யாரும் மறக்க இயலாது.
என்ன இருந்தாலும் என்ன செய்வது?
குளம் சீரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா அமைக்கப்படும்,
மழைநீர் சேகரிப்பு மையமாக இருக்கும் என்பது போன்ற கடந்த கால அறிவிப்புகள் காற்றில் கரைந்து விட்டன.
குளத்தின் ஒரு பக்கம் கடைகளைக் கட்டி வசூல் செய்கிறது நகராட்சி.
இன்னோரு பக்கத்தில் இல்லாத சொந்தத்தைக் கொண்டாடி வாடகை வசூலிக்கிறது அறநிலையத்துறை.
இதற்கிடையில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு திணிக்கப்படுமோ அங்கெல்லாம் மெல்ல மெல்லத் ஆக்கிரமிப்புகளும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இதில் ஒரு சதவீதம் கூட குளத்தின் பராமரிப்பில் காட்டப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
விழுப்புரம் நகரத்தின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்.
அப்படியானால், ஐயனார் குளம் மட்டுமல்ல நகரத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும்..!
புதன், 5 செப்டம்பர், 2018
விழுப்புரம்: தரைமட்டமான நூலகக் கட்டடம்...
விழுப்புரம் கிளை நூலகம்.
1950களில் இருந்து, தெற்கு ஐயனார் குளக்கரையில் இயங்கி வந்தது.
1994இல், மாவட்ட பிரிவினைக்குப் பிறகு, மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.பின்னர், 2005இல், பெருந்திட்ட வளாகத்தில், சொந்த கட்டடத்தில் குடியேறியது.
இதற்கிடையில் பழைய கட்டடத்தில் சில மாதங்கள் பகுதி நேர நூலகம் இயங்கி வந்தது. அப்போது ‘இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு தேவை' என அன்றைய மாவட்ட நூலக அலுவலர் அசோகன், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதினார்.
பிறகு ஒரு நாள் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது.
விழுப்புரத்துக்கு கிளை நூலகம் வேண்டுமே, பழைய கட்டடத்தை என்ன செய்வது? என்பது பற்றி எல்லாம் விழுப்புரம் மாவட்ட பொது நூலகத்துறை கவலைப்படவில்லை.
இதன் விளைவு? அண்மையில் பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட இருக்கிறதாம்!
உள்ளூரைச் சேர்ந்த ஆளும்கட்சி வி.ஐ.பி. ஒருவர் இதில் தீவிரம் காட்டுவதால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த இடத்தைக் காப்பாற்ற இப்போது இருக்கும் மாவட்ட நூலக அலுவலர் மேற்கொண்ட கடைசி நேர முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
நூலகக் கட்டடம் இயங்கி வந்த இடம் நூலகத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதற்கான எந்த வித ஆவணமும், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலகத்தில் இல்லை என்பதுதான் இத்துறையின் அலட்சியத்தின் உச்சக்கட்டம்!
நூலகத்தின் பழைய கட்டடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்களுக்கு நான் பலமுறை மனு அளித்திருக்கிறேன்.
அத்தனையும் இதோ தரைமட்டமாகப் போய்விட்டது..!
வேதனையுடன்…
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.
1950களில் இருந்து, தெற்கு ஐயனார் குளக்கரையில் இயங்கி வந்தது.
1994இல், மாவட்ட பிரிவினைக்குப் பிறகு, மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.பின்னர், 2005இல், பெருந்திட்ட வளாகத்தில், சொந்த கட்டடத்தில் குடியேறியது.
இதற்கிடையில் பழைய கட்டடத்தில் சில மாதங்கள் பகுதி நேர நூலகம் இயங்கி வந்தது. அப்போது ‘இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு தேவை' என அன்றைய மாவட்ட நூலக அலுவலர் அசோகன், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதினார்.
பிறகு ஒரு நாள் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது.
விழுப்புரத்துக்கு கிளை நூலகம் வேண்டுமே, பழைய கட்டடத்தை என்ன செய்வது? என்பது பற்றி எல்லாம் விழுப்புரம் மாவட்ட பொது நூலகத்துறை கவலைப்படவில்லை.
இதன் விளைவு? அண்மையில் பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட இருக்கிறதாம்!
உள்ளூரைச் சேர்ந்த ஆளும்கட்சி வி.ஐ.பி. ஒருவர் இதில் தீவிரம் காட்டுவதால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த இடத்தைக் காப்பாற்ற இப்போது இருக்கும் மாவட்ட நூலக அலுவலர் மேற்கொண்ட கடைசி நேர முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
நூலகக் கட்டடம் இயங்கி வந்த இடம் நூலகத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதற்கான எந்த வித ஆவணமும், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலகத்தில் இல்லை என்பதுதான் இத்துறையின் அலட்சியத்தின் உச்சக்கட்டம்!
நூலகத்தின் பழைய கட்டடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்களுக்கு நான் பலமுறை மனு அளித்திருக்கிறேன்.
அத்தனையும் இதோ தரைமட்டமாகப் போய்விட்டது..!
வேதனையுடன்…
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.
நான் வாத்தியார் மகனென்பதில்...
வாத்தியார்…
இவர் மிகவும் கண்டிப்பானவர்.
குறும்பு செய்யும் மாணவர்களின் காதைத் திருகித் தண்டனை கொடுப்பது இவரது தனிச்சிறப்பு.
இதுபற்றி மாணவர்கள் தமதுப் பெற்றோரிடம் புகார் சொன்னால்
' வாத்தியார் செய்ததில் நியாயம் இருக்கும்' என்பார்களாம்.
இவரிடம் திருகு வாங்கிய முன்னாள் மாணவர்கள் பலரும் இந்நாளிலும் நினைவுகூரக் கேட்டதுண்டு.
கண்டிப்பு, மாணவர்களிடம் மட்டுமில்லை. அதிகாரிகளிடமும். எதிலும் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும் என்பார்.
இதனால், விழுப்புரம்
ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில்
சி.கே. (சி.கோதண்டம்) வுக்கு தனி மரியாதை!
முறுக்கிய மீசையுடன் தூய கதராடையில்
வாத்தியார் நடந்துவரும் கம்பீரமே தனி அழகு!
சிறு வயதில்
இவர் கை விரல்களைப் பற்றி வீதியில் நடந்தபோதும்
இப்போதும், ஏன் எப்போதுமே
எனக்குப் பெருமிதம் தான்…
நான் வாத்தியாரின் மகனென்று…
செவ்வாய், 4 செப்டம்பர், 2018
ஆங்கிலேயர் காலக் காசு...
என் தந்தையார் திரு.சி.கோதண்டம் (88) அவர்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தம் இளமைக் காலத்தில், பழங்கால காசுகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டியவர்.
அவரது சேகரத்தில் இருந்த சில காசுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,
தன் பேரப் பிள்ளைகளிடம் (என் மகள் மகனிடம்) கொடுத்தார்.
அவர்களும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அதில் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது இந்தக் காசு:
ஒரு பக்கத்தில்
VICTORIA QUEEN
என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மணிமகுடம் தரித்த மகாராணியின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காசின் இன்னொரு பக்கத்தில்,
HALF
ANNA
--------
INDIA
1862
என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் காசின் தற்போதைய வயது 160 …!
எதிர்காலத்திலத்திலும், தாத்தா கொடுத்த இந்தக் காசுகளை பத்திரமாய் பாதுகாப்போம் என உறுதியாகச் சொல்கின்றனர் என் பிள்ளைகள்!
ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தம் இளமைக் காலத்தில், பழங்கால காசுகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டியவர்.
அவரது சேகரத்தில் இருந்த சில காசுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,
தன் பேரப் பிள்ளைகளிடம் (என் மகள் மகனிடம்) கொடுத்தார்.
அவர்களும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அதில் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது இந்தக் காசு:
ஒரு பக்கத்தில்
VICTORIA QUEEN
என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மணிமகுடம் தரித்த மகாராணியின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காசின் இன்னொரு பக்கத்தில்,
HALF
ANNA
--------
INDIA
1862
என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் காசின் தற்போதைய வயது 160 …!
எதிர்காலத்திலத்திலும், தாத்தா கொடுத்த இந்தக் காசுகளை பத்திரமாய் பாதுகாப்போம் என உறுதியாகச் சொல்கின்றனர் என் பிள்ளைகள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)