ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆலகிராமம் பிள்ளையார்

ஆதிவிநாயகர், சோமவிநாயகர், பாலகணபதி, ஹேரம்ப கணபதி… இன்னும் எத்தனை எத்தனை பேர்கள்.

விழுப்புரத்தில் கூட “கோட்டை விநாயகர்” வீற்றிருக்கிறார்.

இவர் குறித்து, குறிப்பாக இவர் பிறப்பு குறித்து எத்தனை எத்தனை கதைகள்!

ஆனால், "பிள்ளையார் பிறந்தது கலைஞனது சிந்தனையில்" என்பார், எழுத்தாளர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

அதுவும், "இந்தக் கடவுள் தமிழனின் கண்டுபிடிப்பு" என்றும் சொல்வார் அவர்.

கணபதி, வாதாபியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்று வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில்,

இந்த வரலாற்றுக் கதையை முறியடித்து இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம், ஆல கிராமத்துப் பிள்ளையார்!


இவரதுக் காலம் கி.பி.4-5 நூற்றாண்டு!

இந்த வகையில், சிற்பத்தின் இடம்பெற்றுள்ள கல்லெழுத்தின் அடிப்படையில்,

தமிழ்நாட்டுப் பிள்ளையார் சிற்பங்களில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார், ஆலகிராமத்தார்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக