செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தொண்டூர் - தமிழிக் கல்வெட்டு

“(இ)ளங்காயிபன் ஏவ அகழ்ஊறரம்
மோசி செய்த அதிடானம்”

தொண்டூர், பஞ்சனார்படி மலைக் குன்றில் காணப்படும் கல்லெழுத்து வாசகம்.

இதன் காலம் கி.மு.2ஆம் நூற்றாண்டு!


இக்கல்வெட்டினை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பதிவு அதிகாரியாக இருந்த திரு.மா.சந்திர மூர்த்தி அவர்கள், 17.10.1991இல் கண்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளத் தொன்மை வாய்ந்தக் கல்வெட்டு, தொண்டூர் கல்வெட்டு ஆகும்.

தமிழ் எழுத்தின் வளர்ச்சியைக் காட்டும் கல்லெழுத்துக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது தொண்டூர் கல்வெட்டு!

பஞ்சனார்படி மலையில் சமணக் கற்படுக்கைகள் காணப்படுகின்றன.


இவற்றிற்கு அருகில் தான் மேற்காணும் கல்லெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.


கற்படுக்கைகளுக்கு அருகில் உள்ள பாறையில், பார்சுவநாதர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தின் தொன்மையைச் சொல்லும் தொண்டூர் கல்வெட்டு, தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லை என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும்!


தொண்டூர்: செஞ்சியில் இருந்து 16 ஆவது கி.மீ.இல் பென்னகர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புகைப்படங்கள்: நண்பர்
திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக