செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அன்னியூர் - மும்மூர்த்திகள்

கோயில் என்றால் பிரம்மாண்ட கட்டடம் கிடையாது. உள் பிரகாரம், வெளி பிரகாரம் என்றெல்லாம் இல்லை.

ஒரே பிரகாரம் தான். ஆமாம். வெட்டவெளிதான்!

ஓரளவுக்கு மரங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் தான் இந்த மும்மூர்த்திகளும் நின்றிருக்கின்றனர்.


பிரம்மா – சிவன் – விஷ்ணு மும்மூர்த்திகளுக்குக் கோயில் எடுப்பது, பல்லவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. நம்ம மாவட்டத்தில் இருக்கிற, மண்டகப்பட்டு குடைவரை!

அப்புறம், நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற, திருவாமாத்தூர். பலகைக் கல்லில் மும்மூர்த்திகள். பல்லவர் காலம்.

அன்னியூரில் அழகிய கருங்கல்லில் மும்மூர்த்திகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர்.

அருகிலேயே, இடம்புரி விநாயகர்.



இன்றும் வழிபாட்டில் இருக்கும் இந்தச் சிற்பங்கள் சோழர் காலத்தியதாக இருக்கலாம்! வல்லோர் விளக்க வேண்டும்.

இவை தவிர, அன்னியூரில் பிரம்மாண்ட சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன.

நேற்று 17.09.2019 மாலை திடீர் பயணமாக நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணுவும் இங்குச் சென்றிருந்தோம்.

நல்ல மழை! நனைந்தபடி இரவு விழுப்புரம் வந்து சேர்ந்தோம்.

மும்மூர்த்திகள் மற்றும் அன்னியூர் ஆலயங்களை தரிசிக்க வாய்ப்பு வழங்கிய நண்பர் திரு. அன்னியூர் சிவா
 அவர்களுக்கும், வழித்துணையாக வந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நம் நன்றிகள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக