ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கல்யாணம்பூண்டி - சண்டிகேசுவரர்

வெயில் மண்டையைப் பிளக்கிறது…

ஆனாலும், அண்மையில் பெய்த மழை நீர், மலை மீதிருந்து கீழே இறங்கும் சலசலப்பு மனதுக்கு இதமாக இருக்கிறது.

மண்ணின் மைந்தர் மணி வழிகாட்ட, நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணு துணை வர, கல்யாணம்பூண்டி வனப் பகுதிக்குள் நம் தேடல் தொடர்கிறது.

“இதோ இங்கு ஐயனார் கோயில் இருக்கிறது” புதர்கள் அடர்ந்த அந்தப் பகுதியை மணி சுட்டிக்காட்டினார்.

செடிகளை விலக்கி உள்ளே சென்றோம்.

திறந்த வெளியில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய கோயில்.

சிறியதும் பெரியதுமாக கருங்கல் யானைகள்.


புதிய ஐயனார், “கேட்” போடப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்.

தெற்கில் பின்னமான சிற்பம்; தலை இல்லை. சிற்றிடை. பெண்ணாக இருக்க வேண்டும்!

ஐயனாருக்கும் மேற்காணும் சிற்பத்திற்கும் நடுவே ஒருவர் கால்களை மடக்கி அமர்ந்து இருக்கிறார்.


இவரும் ஐயனார் என்றே வழிபடப்பட்டு வருகிறார் போலும்!

இவர் யாராக இருக்கும்?

காஞ்சியில் இருக்கும் பேராசிரியர் திரு.சங்கர நாராயணன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

“சண்டிகேசுவரர்” என்று சொன்ன பேராசிரியர் அவர்கள், “இவரதுக் காலம் 11-12ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்”  என்றார்.

அடடா… கல்யாணம்பூண்டி வரலாற்றுப் புதையலில் சண்டிகேசுவரரும் ஒருவர்.

கல்யாணம்பூண்டி சண்டிகேசுவரர் வரலாற்றில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்றே கருதுகிறோம்.

வனப் பகுதியில் இருக்கும் இவரை வெளிப்படுத்துவதில் நமக்கு மகிழ்ச்சியே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக