கல்யாணம்பூண்டி மக்கள் இந்தப் பாறையை எழுத்துப் பாறை என்று அழைக்கின்றனர்... உண்மையில் ஓவியப் பாறை என்றழைக்க வேண்டும்!
கீழ்வாலையில் ஓவியத் தொகுப்பு அடங்கியிருக்கும் பாறையை அப்பகுதியினர் இப்படித்தான் அழைக்கின்றனர்.
கல்யாணம்பூண்டியில் இருக்கும் பாறையையும் ஏன் இப்படி அழைக்க வேண்டும்?
இங்கும் ஓவியங்கள... அதுவும் பெருங்கற்கால ஓவியங்கள் இருக்கின்றனவே!
பறவை, பறவை முகம் கொண்ட மனிதன், குறியீடு என கீழ்வாலையில் இருப்பதுப் போன்ற ஓவியங்கள். ஆனால், வெண் சாந்து நிறத்தில்!
இன்னும் இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அழிந்துவிட்டன.
கல்யாணம்பூண்டி கிராமத்திற்கு நாம் மேற்கொண்ட தொடர்ச்சியானக் கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஓவியங்கள்.
இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சௌந்தர் மற்றும் மணி, இதுபற்றிய விவரங்களைத் தந்துதவிய ஐயா சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நம் நன்றிகள் உரித்தாவதாக.
3000 ஆண்டுகள்பழமைவாய்ந்த ஓவியங்கள் கல்யாணம்பூண்டி கிராமத்திற்குப் புதிய வரலாறைத் தந்துள்ளன.
நாம் அறிந்த வரையில் இந்த ஓவியங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.
இல்லை, ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால் விவரமறிந்த நண்பர்கள் தெரிவிக்கவும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக