விழுப்புரம் அருகே உள்ள அதனூர் கிராமம்.
கி.பி.12ஆம் நூற்றாண்டு சிவாலயம் இருந்து சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறது.
இக்கோயில் முற்றிலும் பிரிக்கப்பட்டு, புதிதாகக் கட்டும் பணியில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 20.09.2019 மாலை அதனூர் கிராமத்திற்கு நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணு ஆகியோருடன் திடீர் பயணம்.
அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் சீனு அவர்களுக்கு அளித்தத் தகவலின் பேரில் அதனூரில் நமக்கு நல்ல வரவேற்பு.
சிற்பங்கள் நிறைந்தத் தூண்கள்.
அழகிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.
ஓரிரு கல்வெட்டுத் துண்டுகள்.
நாகலிங்கம் உள்ளிட்ட சில சிற்பங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப்பட்டுள்ளது. பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
“நிதி தட்டுப்பாட்டில் பணிகள் அப்படியே நிற்கிறது. போதிய நிதி கிடைத்தால் பணிகள் விரைவில் முடிந்துவிடும்” என்கின்றனர் பெரியவர்களும் இளைஞர்களும்.
அதனூர் மண்ணில் இந்த அழகியக் கலைக்கோயில் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். நிற்கும் என நம்புவோம்! எழுந்து நிற்க வேண்டும் என வாழ்த்துவோம்..!
அதனூர்: விழுப்புரம் – திருவண்ணாமலை சாலையில், சூரப்பட்டு அருகே அமைந்துள்ள கிராமம்.
கி.பி.12ஆம் நூற்றாண்டு சிவாலயம் இருந்து சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறது.
இக்கோயில் முற்றிலும் பிரிக்கப்பட்டு, புதிதாகக் கட்டும் பணியில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 20.09.2019 மாலை அதனூர் கிராமத்திற்கு நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணு ஆகியோருடன் திடீர் பயணம்.
அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் சீனு அவர்களுக்கு அளித்தத் தகவலின் பேரில் அதனூரில் நமக்கு நல்ல வரவேற்பு.
சிற்பங்கள் நிறைந்தத் தூண்கள்.
அழகிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.
ஓரிரு கல்வெட்டுத் துண்டுகள்.
நாகலிங்கம் உள்ளிட்ட சில சிற்பங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப்பட்டுள்ளது. பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
“நிதி தட்டுப்பாட்டில் பணிகள் அப்படியே நிற்கிறது. போதிய நிதி கிடைத்தால் பணிகள் விரைவில் முடிந்துவிடும்” என்கின்றனர் பெரியவர்களும் இளைஞர்களும்.
அதனூர் மண்ணில் இந்த அழகியக் கலைக்கோயில் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். நிற்கும் என நம்புவோம்! எழுந்து நிற்க வேண்டும் என வாழ்த்துவோம்..!
அதனூர்: விழுப்புரம் – திருவண்ணாமலை சாலையில், சூரப்பட்டு அருகே அமைந்துள்ள கிராமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக