வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மரக்காணம் - கழுவெளி

கிழக்கு கடற்கரை சாலையில், பக்கிங்காம் கால்வாய்…

கால்வாயின் வடகரை காஞ்சிபுரம் மாவட்டம். தென்கரை விழுப்புரம் மாவட்டம்.

பக்கிங்காம் கால்வாய் கரைகளில் இயற்கையாகவே உருவாகி இருக்கும் சதுப்பு நிலப் பகுதிகள். அதனெயொட்டி அடந்து வளர்ந்து இருக்கும் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகள்.


இந்த அலையாத்திக் காடுகளுக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை சட்டவிரோத இறால் பண்ணைகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓரளவு அகற்றப்பட்டு விட்டன.

அலையாத்திக் காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை?

இயற்கையின் கொடையாகத் திகழும் இந்த சதுப்பு நிலப் பகுதியையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் நிஜமாவே அக்கறை காட்டுகிறார் நண்பர் சர்வேஷ் குமார்.


அவருக்கு நம் வாழ்த்துகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கும் இருக்கிறது!


லையாத்திக் காடுகள் நோக்கிய இந்தப் பயணத்தில் துணையாக நின்ற நண்பர்கள் திரு.சர்வேஷ் குமார், வழக்கறிஞர் திரு.சாரதி, தம்பி விஷ்ணு ஆகியோருக்கு நன்றிகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக