ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கவிஞர் பச்சியப்பன்

“ ஏ வேலாயி வேலாயி
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா?”

… கண்ணான தேசத்துல காவேரி ஓரத்துல
காட்டுச் சிங்கம் பொறந்ததடி…

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சந்தனக் காடு” தொடரின் டைட்டில் சாங்.

இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வீரமிக்க வரிகளுக்குச் சொந்தக்காரர், இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர், பேராசிரியர் கவிஞர்.பச்சியப்பன்
அவர்கள்.


தாம்பரம், சானடோரியத்தில் 29.09.2019 ஞாயிறு காலை சந்திப்பு. நீண்ட நேரம் பேசினோம். பின்னர், குரோம்பேட்டை சுப்புராயர் நகரிலும் பேசினோம்.

குறிப்பாக, வரும் 6ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள “மக்கள் கவிஞர் பழமலய் படைப்புலகம்” ஒரு நாள் கருத்தரங்கம் குறித்து விரிவாகப் பேசினோம்.

இந்நிகழ்வினை கவிஞர்கள் பச்சியப்பன், கண்மணி குணசேகரன், நண்பர் சுபாஷ் ஆகியோர் முன்னின்று நடத்துகின்றனர். இவர்களுடன் நானும்...

“கவிஞர் பழமலயின் எழுத்துகளை வாசிப்பதும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதும் வரலாற்றுத் தேவை” என்கிறார் கவிஞர் பச்சியப்பன்.

தங்களின் முன்னெடுப்புகள்
வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக