புதன், 11 செப்டம்பர், 2019

கல்யாணம்பூண்டி கல்தூண்கள்



பேராசிரியர் த.பழமலய் கூட இதுபற்றி கவிதை எழுதியிருக்கிறார்.

செஞ்சி வேங்கட ரமணர் கோயிலுக்கு எழில் சேர்க்கும் அழகிய சிற்பங்கள் அடங்கியத் தூண்கள் கல்யாணம்பூண்டியில் இருந்து தான் கொண்டு செல்லப்பட்டனவாம்.

இதன் மிச்ச சொச்சங்களை இப்போதும் நாம் இங்குப் பார்க்கலாம்!

இதிலும் கூட சில தூண்கள் அண்மைக் காலத்தில் காணாமல் போய் இருக்கின்றன!

இருப்பவற்றை யாவது பாதுகாக்க வேண்டும். "ஒவ்வொன்றிலும் எண் போட்டு வையுங்கள்" உள்ளூர் நண்பர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

2005ஆம் ஆண்டில் அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுடன் சென்றிருந்தேன்.


14 ஆண்டுகளுக்குப் பின்பு, அண்மையில் கல்யாணம்பூண்டி சென்றிருந்தேன்.

கல் தூண்கள் குறித்து உங்களுடன் ஒரு பகிர்வு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக