புதன், 11 செப்டம்பர், 2019

பரிக்கல் - முதுமக்கள் தாழிகள்

“ஊரே சுடுகாடாகத்தான் இருந்திருக்கு!” ஆச்சரியப்பட்டார், உடன் வந்த நண்பர் திருவாமாத்தூர் சரணவணக்குமார்.

ஆமாம். எங்கெங்கு காணினும் உடைந்தத் தாழியின் ஓடுகள் நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றன.


உளுந்தூர்ப்பேட்டை அருகில் உள்ள பரிக்கல் (நத்தம்) கிராமத்தில்தான் இந்த நிலை.

பரிக்கல் கிராமத்தின் வடக்கே மிகவும் பிரம்மாண்டமாக பரந்துவிரிந்துக் காட்சியளிக்கிறது, பரிக்கல் ஏரி.


ஏரியின் களிங்கல் பகுதியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இன்னமும் முழுமையாகக் காட்சியளிக்கின்றன முதுமக்கள் தாழிகள்.


களிங்களுக்கு எதிரே சில அடி தூரத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பிளாட் போட்டு இருக்கிறது.


அதிலும்கூட ஐந்தாறு முதுமக்கள் தாழிகள் இருக்கின்றன.

நத்தம் பகுதி மிகப்பெரிய புதைவிடமாக, ஈமச்சின்னங்கள் நிறைந்தப் பகுதியாக இருந்திருக்கிறது.

தமிழர்களின், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரலாற்றுத் தடத்தினைக் கொண்டப் பகுதி!

இந்தப் பகுதியில் எப்படி அரசாங்கம் பட்டா கொடுத்தது? நமக்குப் புரியவில்லை!

நல்லவேளை, யாரும் இங்க இடம் வாங்க இதுவரை முன்வரவில்லை. சில அடி தூரத்தில் அமைந்துள்ள ஏரி களிங்கல்தான் வருகிறவர்களை யோசிக்க வைத்திருக்க வேண்டும்!


அந்த வகையில் பரிக்கல் ஏரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!

நத்தம் பகுதியில்தான் அப்போதை கிராமம் இருந்திருக்க வேண்டும் என அழகாக விவரிக்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி (வயது75).


ஒருகட்டத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வெளிப்பட, பரிக்கல் பெரிய கிராமமாக உருவெடுத்துள்ளது.

பண்டையத் தமிழர்களின் வாழ்வியற் தடயங்கள் நிறைந்த பரிக்கல் - நத்தம் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்! இதற்கான முன்முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்..!


நன்றி:
திருவாமாத்தூர் கண சரவணகுமார்
Vishnu Stark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக