எழுத்தாளர்
பனையபுரம் அதியமான்
அவர்களுடன் சந்திப்பு...
இவர் எழுதிய
பல கட்டுரைகளைத் தினந்தந்தியில் படித்திருக்கிறேன்.
வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நூல்களையும் படித்திருக்கிறேன்.
கோயில்கள் தொடர்பானத் தகவல்களை ஆன்மீகத்தோடு நிறுத்திவிடாமல்,
கல்வெட்டுகளின் துணையுடன் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்திருப்பார்.
புகழ்ப்பெற்ற பனையபுரத்தின் பனங்காட்டீசுவரர்க் கோயிலின் ஒருபகுதி,
தேசிய நெடுஞ்சாலைத்துறையால், சாலை விரிவாக்கத்துக்காகக் கையகப்படுத்தும் நடவடிக்கை
2011இல் உருவானது.
இதை அந்தக் கிராம மக்கள் எதிர்த்தனர். கோயில் காப்பாற்றப்பட வேண்டும்
என்பதற்கான முயற்சியில் முழுமூச்சில் ஈடுபட்ட பனையபுரம் அதியமான், தனது வலிமைமிக்க
எழுத்தை மிகச்சரியானத் திசையில் செலுத்தினார்.
விளைவு? அனைத்துக் கரங்களும் ஒன்றிணைந்ததால் பனையபுரம் கோயில்
காப்பாற்றப்பட்டது.
திரு.அதியமான் அவர்களின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். ஆனால்
அவர் எனக்குப் பரிச்சயமில்லை.
இரண்டொரு மாதங்களுக்கு முன்புதான், தொலைப்பேசி வாயிலாகப்
பரிச்சயமானார். ஆனாலும், நேரில் பார்க்கவில்லையே..?
அந்தக் குறையும் தீர்ந்தது. இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை நேரில் சந்தித்து அளவளாவினேன்.
மகிழ்ச்சியடைந்தேன்.
அப்போது, அவர் எழுதிய ‘ஒப்பற்ற வாழ்வுதரும் உன்னத ஆலயங்கள்’ நூலினையும் எனக்கு வழங்கினார்.
இந்நேரியப் படைப்பாளரின் தொடர்பு இன்னும் பல்லாண்டுக் காலம் தொடர
வேண்டும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக