நல்ல
விசயம்தான்... விழுப்புரம் நகராட்சியைப் பாராட்டலாம்..!
புதிய
பஸ் நிலையச் சுவர்களைப் பார்க்கும்போது பல நேரங்களில் எரிச்சல்தான் ஏற்படும்.
கண்ணே
மணியே தொடங்கி... எங்களை மறந்தாயா? என்பது வரையிலான விதவிதமான சுவரொட்டிகள் இவற்றை
ஆக்கிரமித்திருக்கும்.
விழுப்புரம்
நகராட்சி நிர்வாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை. வடக்குப் புறத்தில் இருக்கும்
சுவரை சுத்தம் செய்திருக்கிறார்கள்.
அப்புறம்...
வெறுமனே
வெள்ளையடித்து விட்டுவிடாமல், அதில் சில ஓவியங்களையும் வரைந்து
வைத்திருக்கிறார்கள்.
மத்திய
அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான விளம்பரம்தான் இது. ஆனாலும் பரவாயில்லை,
பொருத்தமான இடத்தில்தான் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
கழிவறையின்
அவசியத்தை வலியுறுத்தும் விளம்பரப் படங்கள் இவை.
இவற்றினூடாக,
செஞ்சிக் கோட்டை பல வண்ணங்களில் பளிச்சிடுகின்றது. அழகியப் பறவைகள் கீச்சிடுகின்றன.
புள்ளி மான், விழிகள் மருளப் பார்க்கிறது.
இம்முயற்சிக்காக,
விழுப்புரம் நகராட்சியைப் பாராட்டலாம்.
நிலையத்தின்
மற்றப் பகுதிகளில் இருக்கும் சுவர்களும்கூட இப்படி மாற்றப்படும் என நம்புவோம்.
அப்படியே,
பஸ் நிலையத்துக்குள் நுழையும்போது மூக்கைப் பொத்திக் கொள்ளும் நிலைமை இன்னும்
இருக்கிறதே!
தூய்மை
இந்தியா திட்டத்தில் இதனையும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்
கொண்டால் இன்னும் சந்தோசம் தான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக