விழுப்புரம் அருகே
பம்பை ஆற்றில் உறைகிணறு கண்டுபிடிப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி
09.08.2019
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருவாமாத்தூர் கிராமம்.
இங்குள்ள அபிராமேசுரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். தேவார மூவரால் பாடல்பெற்ற தலமாகும். இங்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் ஜீவ சமாதியும் அவரால் நிறுவப் பெற்ற கௌமார மடமும் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஓடும் பம்பை ஆறு இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்றதாகும். ஒரே நாள் இரவில் இந்த ஆறு தடம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
பம்பை ஆற்றில் பழைய கட்டுமானம் ஒன்று காணப்படுவதாக இப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கண.சரவணகுமார், விழுப்புரம் எழுத்தாளரும் அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோ.செங்குட்டுவனுக்குத் தகவல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கோ.செங்குட்டுவன், கோ.பாபு, அ.அகிலன், ப.ரே.ம.கிருஷ்ண மூர்த்தி, சாம்சன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள், கண.சரவணகுமார் உள்ளிட்ட கிராமவாசிகளின் உதவியுடன் பம்பை ஆற்றில் வியாழக்கிழமை (08.08.19) களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் அளவில் பெரியதும் மிகவும் கனமானதுமாக இந்த உறைகிணறு அமைந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த உறைகிணறு, அண்மையில் இப்பகுதியில் மண் எடுக்கும்போது வெளிப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இதனையறிந்த வரலாற்று ஆர்வலர் சரவணகுமார், இப்பகுதியில் மேலும் மண் எடுப்பதைத் தடுத்து, உறை கிணறு மேலும் சேதமடையாமல் பாதுகாத்திருக்கிறார். அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
மக்கள் குரல்
09.08.2019
இந்த உறைகிணறு மிகப்பெரியதாக காணப்படுகிறது. தடித்த ஓடுகளால் வளையம் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
உறைகிணற்றின் 11 அடுக்குகள் மட்டும் (சுமார் 6 அடி) தற்போது தெரிகிறது. மேலும் பல அடுக்குகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
இப்பகுதியில், மேலும் பல உறைகிணறுகள் இருந்ததாகவும், அவை அழிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகர்க்கப்பட்டவைகளின் சில பாகங்களை ஆற்றின் நெடுகிலும் பார்க்க முடிகிறது.
மாலை முரசு
09.08.2019
தற்போது பம்பை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளது உறைகிணறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், மிகவும் பிற்காலத்தியது எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எப்படியானாலும் இது வரலாற்றுத் தடயம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
தினமலர் 11.08.2019
புதுச்சேரி பதிப்பு
தினமலர், சென்னை பதிப்பு.
இதுபற்றி தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் தடயமுள்ள இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். உறை கிணற்றின் காலத்தைக் கணித்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
The new Indian express 12.08.2019
பம்பை ஆற்றில் உறைகிணறு கண்டுபிடிப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி
09.08.2019
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருவாமாத்தூர் கிராமம்.
இங்குள்ள அபிராமேசுரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். தேவார மூவரால் பாடல்பெற்ற தலமாகும். இங்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் ஜீவ சமாதியும் அவரால் நிறுவப் பெற்ற கௌமார மடமும் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஓடும் பம்பை ஆறு இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்றதாகும். ஒரே நாள் இரவில் இந்த ஆறு தடம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
பம்பை ஆற்றில் பழைய கட்டுமானம் ஒன்று காணப்படுவதாக இப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கண.சரவணகுமார், விழுப்புரம் எழுத்தாளரும் அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோ.செங்குட்டுவனுக்குத் தகவல் அளித்தார்.
தினத்தந்தி
09.08.2019இதனைத் தொடர்ந்து கோ.செங்குட்டுவன், கோ.பாபு, அ.அகிலன், ப.ரே.ம.கிருஷ்ண மூர்த்தி, சாம்சன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள், கண.சரவணகுமார் உள்ளிட்ட கிராமவாசிகளின் உதவியுடன் பம்பை ஆற்றில் வியாழக்கிழமை (08.08.19) களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் அளவில் பெரியதும் மிகவும் கனமானதுமாக இந்த உறைகிணறு அமைந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த உறைகிணறு, அண்மையில் இப்பகுதியில் மண் எடுக்கும்போது வெளிப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இதனையறிந்த வரலாற்று ஆர்வலர் சரவணகுமார், இப்பகுதியில் மேலும் மண் எடுப்பதைத் தடுத்து, உறை கிணறு மேலும் சேதமடையாமல் பாதுகாத்திருக்கிறார். அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
மக்கள் குரல்
09.08.2019
இந்த உறைகிணறு மிகப்பெரியதாக காணப்படுகிறது. தடித்த ஓடுகளால் வளையம் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
உறைகிணற்றின் 11 அடுக்குகள் மட்டும் (சுமார் 6 அடி) தற்போது தெரிகிறது. மேலும் பல அடுக்குகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
இப்பகுதியில், மேலும் பல உறைகிணறுகள் இருந்ததாகவும், அவை அழிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகர்க்கப்பட்டவைகளின் சில பாகங்களை ஆற்றின் நெடுகிலும் பார்க்க முடிகிறது.
மாலை முரசு
09.08.2019
தற்போது பம்பை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளது உறைகிணறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், மிகவும் பிற்காலத்தியது எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எப்படியானாலும் இது வரலாற்றுத் தடயம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
தினமலர் 11.08.2019
புதுச்சேரி பதிப்பு
தினமலர், சென்னை பதிப்பு.
இதுபற்றி தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் தடயமுள்ள இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். உறை கிணற்றின் காலத்தைக் கணித்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
The new Indian express 12.08.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக