இரண்டு கால் முட்டிகளிலும் கடுமையான வலி!
மலையின் உயரம் அதிகமில்லை. குறைவுதான். ஆனால், போகும் பாதைதான் மிகவும் கரடுமுரடனானது.
நடுநடுவே நீட்டிக்கொண்டு இருக்கும் முள் செடிகள் சட்டையையும் அவ்வப்போது உடலையும் கூட பதம் பார்த்தன.
ஒரு இடத்தில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டும். இன்னொரு இடத்தில் செங்குத்தாக இறங்க வேண்டும்.
சில இடங்களில் மரக் கிளைகளும் சில இடங்களில் பாறைகளுமே நமக்கு ஆதாரங்கள்.
இப்படி ஏறும் போது தான், ஒரு இடத்தில், பாறையின் மீது வழுக்கி விட, கால் முட்டிகளில் பயங்கர உள்ளடி!
“ஐயா, வாங்கய்யா நான் பிடிச்சுக்கறேன்” இந்தாண்டு, ஓய்வுபெறப் போகும் தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களின் ஆர்வமும் ஊக்கமும் என்னைத் தளரவிடவில்லை.
எப்படியோ மலை ஏறி, இறங்கினேன்.
தம்பி விஷ்ணுவுடன் செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலம் கிராமத்திற்கு இன்று (23.08.2019 வெள்ளி) பிற்பகல் திடீர் பயணம்.
பின்னர் அங்கிருந்து தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களுடன் நானும் விஷ்ணுவும் மலை ஏறினோம்.
அழகிய அனுபவம். மலைமீது இருக்கும் அந்தச் சரித்திரத்தை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதுபற்றி பின்னர் விரிவாக எழுதலாம்.
இப்போதைக்கு, நமக்குத் தேவை சற்று ஓய்வும் கொஞ்சம் வலி நிவாரணியும்…
எல்லாம் சரியாகிவிடும்…!
வரலாறு எல்லாவற்றையும் சரியாக்கிவிடும் இல்லீங்களா..?
புகைப்படங்கள்: தம்பி விஷ்ணு.
மலையின் உயரம் அதிகமில்லை. குறைவுதான். ஆனால், போகும் பாதைதான் மிகவும் கரடுமுரடனானது.
நடுநடுவே நீட்டிக்கொண்டு இருக்கும் முள் செடிகள் சட்டையையும் அவ்வப்போது உடலையும் கூட பதம் பார்த்தன.
ஒரு இடத்தில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டும். இன்னொரு இடத்தில் செங்குத்தாக இறங்க வேண்டும்.
சில இடங்களில் மரக் கிளைகளும் சில இடங்களில் பாறைகளுமே நமக்கு ஆதாரங்கள்.
இப்படி ஏறும் போது தான், ஒரு இடத்தில், பாறையின் மீது வழுக்கி விட, கால் முட்டிகளில் பயங்கர உள்ளடி!
“ஐயா, வாங்கய்யா நான் பிடிச்சுக்கறேன்” இந்தாண்டு, ஓய்வுபெறப் போகும் தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களின் ஆர்வமும் ஊக்கமும் என்னைத் தளரவிடவில்லை.
எப்படியோ மலை ஏறி, இறங்கினேன்.
தம்பி விஷ்ணுவுடன் செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலம் கிராமத்திற்கு இன்று (23.08.2019 வெள்ளி) பிற்பகல் திடீர் பயணம்.
பின்னர் அங்கிருந்து தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களுடன் நானும் விஷ்ணுவும் மலை ஏறினோம்.
அழகிய அனுபவம். மலைமீது இருக்கும் அந்தச் சரித்திரத்தை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதுபற்றி பின்னர் விரிவாக எழுதலாம்.
இப்போதைக்கு, நமக்குத் தேவை சற்று ஓய்வும் கொஞ்சம் வலி நிவாரணியும்…
எல்லாம் சரியாகிவிடும்…!
வரலாறு எல்லாவற்றையும் சரியாக்கிவிடும் இல்லீங்களா..?
புகைப்படங்கள்: தம்பி விஷ்ணு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக